ஜார்ஜ் கோட்டையில் தலைமைச் செயலக பெயர்ப் பலகை பொருத்தப்பட்டது

கடந்த திமுக ஆட்சியில் சட்டசபைக்கும், தலைமைச் செயலகத்திற்கும் தனியாக பிரமாண்ட கட்டடம் கட்டப்பட்டது. ஆனால் அதன் வடிவமைப்பு உள்ளிட்டவை குறித்து அதிருப்தியும், கண்டனமும் தெரிவித்த அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்தால் புனித ஜார்ஜ்கோட்டையில்தான் ஆட்சியமைப்பேன் என்று சபதமிட்டிருந்தார். இப்போது அவரது சபதம் நிறைவேறுகிறது.
தலைமைச் செயலகம் மீண்டும் கோட்டைக்கே திரும்புகிறது. அதேபோல சட்டசபையும் மீண்டும் பழைய இடத்திற்கே வருகிறது. இதையடுத்து சட்டசபை அரங்கம் இருந்த இடத்தில் திமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவன நூலகம் இடம் மாறுகிறது. இதற்கான உத்தரவு நூலகத்திற்குப் பிறப்பிக்கப்பட்டு விட்டது.
இதைத் தொடர்ந்து நூலகத்தை வேறு இடத்திற்கு மாற்றும் ஏற்பாடுகளைச் செய்ய நூலக ஒருங்கிணைப்பாளர் சிவமணி உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து சட்டசபை அரங்கத்தில் மீண்டும் இருக்கைகள் புதுப் பொலிவுடன் பொருத்தப்படவுள்ளன. அதேபோல கோட்டைக் கட்டடமும் புதுப் பொலிவு பெறுகிறது. முதல்வர், அமைச்சர்களின் அறைகள் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன. அனைத்துப் பணிகளும் மின்னல் வேகக்தில், இரவு பகலாக நடந்து வருகின்றன.












Click it and Unblock the Notifications