நிதி வசூல்: எல்டிடிஈ மூத்த தலைவர் நெடியவன் நார்வேயில் கைது-நெதர்லாந்து புகாரால் நடவடிக்கை

விடுதலைப் புலிகள் அமைப்புக்கு பல மில்லியன் யூரோ நிதி வசூலிக்கப்பட்டது தொடர்பாக நெதர்லாந்தில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பான வழக்கும் நெதர்லாந்து நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந் நிலையில் அவர்களிடம் கிடைத்த சில முக்கிய தகவல்களை நார்வே நாட்டிடம் வழங்கியுள்ளனர் நெதர்லாந்து போலீசார். இதன் அடிப்படையில் தான் நெடியவனை நார்வே போலீசார் கைது செய்து விசாரித்து வருவதாகத் தெரிகிறது.
இத் தகவலை நார்வேயின் டிவி-2 தொலைக் காட்சி ( TV2 news Nyhetene) இன்று தெரிவித்தது. நெதர்லாந்து நாட்டு உளவுப் பிரிவினரின் கோரிக்கைப்படியே அவரிடம் விசாரணை நடப்பதாகவும் அந்தத் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.
விடுதலைப் புலிகள் அமைப்பு ஐரோப்பிய யூனியனால் 2006ம் ஆண்டு தீவிரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்டது. இந்த யூனியனில் உள்ள நாடுகளில் புலிகளுக்கு பணம் சேகரிப்பது சட்ட விரோதமாகும்.
இந் நிலையில் நெதர்லாந்தைச் சேர்ந்த ஒருவர் கடந்த ஆண்டில் ரோட்டர்டாம் நகர போலீசாரிடம் தந்த புகாரில், தன்னை ஒரு நபர் மிரட்டி பணம் பறிப்பதாகக் கூறியிருந்தார். இதே போன்ற புகார்கள் அதிகமாக குவிய ஆரம்பிக்கவே ரகசிய விசாரணை துவக்கப்பட்டது.
அதில் இந்தப் பணம் விடுதலைப் புலிகள் அமைப்பிற்குச் செல்வது உறுதியானது. இதையடுத்து கடந்த ஏப்ரல் மாதம் நெதர்லாந்து உளவுத் துறையினர் 16 இடங்களில் சோதனை நடத்தி 7 பேரை கைது செய்தனர்.
இவர்களிடம் நடத்திய விசாரணையில், தாங்கள் சேகரித்த பணத்தை நார்வேயில் உள்ள நெடியவனுக்கு அனுப்பியதாகக் கூறியதாகத் தெரிகிறது. இதையடுத்து நார்வேயிடம் அவரை விசாரிக்கக் கோரியுள்ளது நெதர்லாந்து.
அவரை கைது செய்த ஓஸ்லோ போலீசார் நகர மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரிடம் மூடிய அறைக்குள் ரகசிய விசாரணை நடந்துள்ளது.
நார்வேயில் உள்ள நெடியவன் வீட்டை உரிய அனுமதி பெற்று எல்-சல்வடார் நாட்டு போலீசாரும் சோதனையிட்டதாகத் தெரிகிறது. அந்த நாட்டிலும் பணப் பரிவர்த்தனைகள் நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications