ஏடிஜிபி ராமானுஜத்திற்குப் பதவி உயர்வு-உளவுத்துறை டிஜிபியாக நியமனம்
சென்னை: கூடுதல் டிஜிபி ராமானுஜத்திற்குப் பதவி உயர்வு அளிக்கப்பட்டு அவர் உளவுத்துறை டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். சட்டம்-ஒழுங்கு டிஜிபி பணியையும் அவர் சேர்த்துக் கவனிப்பார் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
உளவுத்துறை கூடுதல் டிஜிபியாக ஏற்கனவே ராஜேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜபியாக ஜார்ஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் தற்போது உளவுத்துறை டிஜிபியாக ராமானுஜம் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இதுவரை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணைய கூடுதல் டிஜிபியாக செயல்பட்டு வந்தார். அவருக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டு டிஜிபியாக்கப்பட்டுள்ளார். இவரே சட்டம்-ஒழுங்கு டிஜிபி பொறுப்பையும் சேர்த்துக் கவனிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளார்.
தேர்தல் ஆணையத்தால் லத்திகா சரணுக்குப் பதிலாக டிஜிபியாக நியமிக்கப்பட்ட போலாநாத், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் இயக்குநராக மாற்றப்பட்டுள்ளார். அந்தப் பதவியில் இருந்த ஷியாம் சுந்தர் லஞ்ச ஒழிப்பு இயக்குநராக மாற்றப்ட்டுள்ளார்.
மீண்டும் நீண்ட விடுப்பில் லத்திகா:
சட்டசபைத் தேர்தல் நடவடிக்கைகள் தொடங்கியதும் டிஜிபியாக போலாநாத் நியமிக்கப்பட்டார். டிஜிபியாக இருந்த லத்திகா சரண் நீண்ட விடுப்பில் அனுப்பப்பட்டார். தற்போதைய சூழ்நிலையைத் தொடர்ந்து மீண்டும் ஒரு மாத விடுப்பு கோரியிருந்தார் லத்திகா சரண். அதற்கு நேற்று அனுமதி அளிக்கப்பட்டது. இதையடுத்து மீண்டும் அவர் விடுப்பில் போயுள்ளார்.
தமிழகத்தைச் சேர்ந்தவரான ராமானுஜம், சேலத்தைச் சேர்ந்தவர். 1978ம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியானார். நீண்ட காலமாக உளவுப் பிரிவில் பணியாற்றியவர். தற்போது அதன் டிஜிபியாகியுள்ளார்.
மீண்டும் வருவார் விஜய்குமார்?:
இவரிடம் கூடுதல் பொறுப்பாக தரப்பட்டுள்ள சட்டம்-ஒழுங்கு டிஜிபி பொறுப்புக்கு விரைவில் தமிழக அதிரடிப்படைத் தலைவராக இருந்த விஜய்குமார் நியமிக்கப்படலாம் என்று தெரிகிறது.
இப்போது மத்திய எல்லைப் பாதுகாப்புப் படைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள விஜய்குமார், ஜெயலலிதாவின் பாதுகாப்புப் படையில் இருந்தவர்.
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் பாதுகாப்புப் படையிலும் இருந்த இவர் காங்கிரஸ் பொதுச் செயலாளகர் ராகுல் காந்திக்கும் நெருக்கமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
EXCLUSIVE: வட இந்தியர்களுக்கு வேலையில்லை.. இனி இட்லி, சப்பாத்தி மட்டும் தான்! குமுறும் ஓட்டல் உரிமையாளர்கள்.! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்?












Click it and Unblock the Notifications