ஆட்சி மாற்றத்திற்குப் பின்பும் விலகாமல் இருந்த 32 அரசு வக்கீல்கள் அதிரடி நீக்கம்
Subscribe to Oneindia Tamil
மதுரை: திமுக ஆட்சி போய், அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகும் மரபுப்படி தங்களது அரசு வக்கீல்கள் பணியை ராஜினாமா செய்யாமல் இருந்த 32 வக்கீல்களின் பதவியை அரசு பறித்துள்ளது.
ஆட்சி மாற்றத்தின்போது அரசுப் பதவிகளை வகிப்போர் குறிப்பாக அரசு வக்கீல்கள், வாரியத் தலைவர்கள் உள்ளிட்டோர் மரபுப் படி விலகுவது வழக்கம். அதன்படி அரசு தலைமை வழக்கறிஞர் உள்ளிட்டோர் விலகி விட்டனர்.
ஆனால் 32 அரசு வக்கீல்கள் மட்டும் பணியில் தொடர்ந்து நீடித்து வந்தனர். பதவி விலகாமல் இருந்து வந்தனர். இதையடுத்து அவர்களை நீக்கி பொதுத் துறைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.
இவர்களுக்குப் பதில் புதிய அரசு வக்கீல்கள் விரைவில் நியமிக்கப்படுவர்.












Click it and Unblock the Notifications