ஜூன் 12-க்குள் வேட்பாளர்கள் செலவு கணக்கை சமர்பிக்க பிரவீன் குமார் உத்தரவு
சென்னை: நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் அனைவரும் வரும் ஜூன் மாதம் 12-ம் தேதிக்குகள் தங்கள் தேர்தல் செலவு கணக்கை சமர்பிக்க வேண்டும் என்று தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது,
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் 2 ஆயிரத்து 748 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் 141 பெண் வேட்பாளர்களும் அடக்கம். ஒவ்வொருவரும் ரூ. 16 லட்சம் வரை தேர்தலுக்காக செலவு செய்யலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
தேர்தல் ஆணையத்தின் உத்தரவுபடி வேட்பாளர்கள் செலவு செய்கிறார்களா இல்லையா என்பதை கண்காணிக்க 5 தொகுதிகளுக்கு ஒரு செலவு பார்வையாளர் நியமிக்கப்பட்டிருந்தனர். வேட்பாளர்களின் செலவு கணக்கை ஒப்பிட்டுப் பார்க்க தேர்தல் ஆணையமும் நிழல் கணக்கை பராமரித்து வந்தது.
வேட்பாளர்கள் தாக்கல் செய்யும் செலவு கணக்குடன் தேர்தல் ஆணையத்தின் நிழல் கணக்கை ஒப்பிட்டு பார்ப்போம். இவற்றுக்கு இடையே அதிக வேறுபாடு இருப்பின், சம்பந்தப்பட்ட வேட்பாளருக்கு இது குறித்து விளக்கம் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்புவோம். அந்த வேட்பாளரின் விளக்கம் ஏற்றுக்கொள்ளும் வகையில் இல்லையெனில் அவரை 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தடை விதிப்பதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
தேர்தல் முடிவு வெளியான தேதியில் இருந்து 30 நாட்களுக்குள் அனைத்து வேட்பாளர்களும் தேர்தல் செலவு கணக்கை அந்தந்த தேர்தல் அதிகாரியிடம் சமர்ப்பிக்க வேண்டும். தமிழகத்தைப் பொருத்தவரை வேட்பாளர்கள் அனைவரும் வரும் ஜூன் மாதம் 12-ம் தேதிகிக்குள் செலவு கணக்கை சமர்ப்பிக்க வேண்டும். வேட்பாளர்களின் செலவுக் கணக்கை ஒப்பிட்டு பார்ப்பதற்காக ஜூன் மாதம் 12-ம் தேதி 58 செலவு பார்வையாளர்கள் வருகின்றனர் என்றார்.
-
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications