நார்வேயில் கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர்கள் மாநாடு: ஜி.கே.வாசன் பங்கேற்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை: நார்வேயில் நடக்கும் கடல் சார் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக மத்திய கப்பல் துறை அமைச்சர் ஜி.கே.வாசன் நேற்று நார்வே புறப்பட்டார்.
நார்வே தலைநகர் ஆஸ்லோவில் கடல் சார் உச்சி மாநாடு இன்று முதல் வரும் 29-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த மாநாடு மற்றும் பொருட்காட்சியில் இந்தியா உள்பட 10 நாட்டு கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர்.
இதில் இந்தியா சார்பில் மத்திய கப்பல் துறை அமைச்சர் ஜி.கே. வாசன் கலந்து கொள்கிறார். இதற்காக அவர் நேற்று நார்வே புறப்பட்டார்.
மாநாட்டின் போது கப்பல் கட்டும் தளங்கள் அமைக்க ஒத்துழைப்பு அளிப்பது குறித்து நார்வே தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் டிரான் கிஸ்கேவை ஜி.கே.வாசன் சந்தித்துப் பேசுகிறார்.












Click it and Unblock the Notifications