ஐநா மனித உரிமை கவுன்சிலுக்கு இந்தியா உள்பட 15 நாடுகள் தேர்வு
மதுரை: ஐக்கிய நாடுகளின் மனித உரிமை கவுன்சில் உறுப்பினராக இந்தியா உள்ளிட்ட 15 நாடுகள் புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
ஜெனீவாவை தலைமையிடமாகக் கொண்டு மொத்தம் 47 உறுப்பினர்களுடன் இயங்கி வருகின்றது ஐக்கிய நாடுகளின் மனித உரிமை கவுன்சில். இதற்கு இந்தியா உள்ளிட்ட 15 நாடுகள் உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் ஏற்கெனவே உறுப்பினர்களாக இருந்த 15 நாடுகளின் பதவிக் காலம் வரும் ஜூன் மாதம் முடிவடைகிறது. அந்த இடங்களை நிரப்புவதற்காக இந்தத் தேர்வு மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகின்றது.
மொத்தம் 189 நாடுகள் வாக்களித்ததில் இந்தோனேஷியாவுக்கு 184, பிலிப்பைன்ஸுக்கு 183, இந்தியாவுக்கு 181 மற்றும் குவைத்துக்கு 166 வாக்குகள் கிடைத்தன.
பர்கினா ஃபாஸோ, போட்ஸ்வானா, காங்கோ, பெனின், செக் குடியரசு, ருமேனியா, சிலி, கோஸ்டா ரிகா, பெரு, இத்தாலி மற்றும் ஆஸ்திரியா ஆகியவை ஐ.நா. மனித உரிமை கவுன்சிலுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மற்ற உறுப்பு நாடுகளாகும்.
இந்த உறுப்பினர் நாடுகளின் பதவிக் காலம் மூன்று ஆண்டுகள் ஆகும்.
தற்போது நடந்து வரும் போராட்டங்களால், சர்வதேச அளவில் கண்டனங்களுக்கு ஆளாகியுள்ள சிரியா தனது வாய்ப்பை குவைத்துக்கு அளித்தது.
-
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
நாய் கூண்டில் 20 சிறுமிகள்... மொத்தம் 700 ஆண்களால் பாதிப்பு! பிரிட்டனை உலுக்கிய பெண்ணின் வாக்குமூலம் -
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு?












Click it and Unblock the Notifications