பெட்ரோல் விலை உயர்வு வாபஸ் இல்லை-பிரணாப் முகர்ஜி பிடிவாதப் பேச்சு!

மும்பையில், இந்திய வங்கிகள் சங்கத்தின் 63வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அதில், மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி கலந்து கொண்டு பேசினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "பெட்ரோல் விலை உயர்வு, வாபஸ் பெறப்பட மாட்டாது. பெட்ரோலிய பொருட்களுக்கு மத்திய அரசு கடந்த ஆண்டு ரூ.1 லட்சம் கோடி மானியம் அளித்தது. டீசலுக்கு லிட்டருக்கு 16 ரூபாயும், மண்எண்ணெய்க்கு லிட்டருக்கு 26 ரூபாயும் மானியம் வழங்கி வருகிறோம். எனவே, பெட்ரோல் விலை உயர்வை வாபஸ் பெற முடியாது.
சில அத்தியாவசிய உணவு பொருட்களின் உற்பத்தியில் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் அந்த பொருட்களின் விலை உயரும் வாய்ப்புள்ளது. உலக சந்தைகளில் நிச்சயமற்ற நிலைமை காணப்படுகிறது. இதனால் நாம் இறக்குமதியை நம்பி இருக்கும் பொருட்களின் விலை உயர்வது இயல்புதான்.
விலைவாசி எந்த திசையில் செல்லும் என்று யாராலும் கணிக்க முடியாது. பொருட்களின் விலை நிலவரம், இப்போதும் கணிக்க முடியாததாகவே இருக்கிறது.
இருப்பினும், ரிசர்வ் வங்கியுடன் இணைந்து உரிய நிதிக்ள்கைகளை பின்பற்றுவதன் மூலம், அதிகமான பொருளாதார வளர்ச்சியை எட்டவும், பணவீக்க விகிதத்தை ஏற்றுக்ள்ளத்தக்க அளவுக்கு குறைக்கவும் மத்திய அரசு தொடர்ந்து முயற்சித்து வருகிறது," என்றார்.












Click it and Unblock the Notifications