பிரதமர் அளித்த விருந்தில் திமுக சார்பில் டி.ஆர்.பாலு மட்டும் பங்கேற்பு
டெல்லி : டெல்லியில் நேற்று நடந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் 3ம் ஆண்டு விழா விருந்துக் கொண்டாட்டத்தில் திமுக தன் சார்பில் டி.ஆர்.பாலுவை மட்டும் அனுப்பி வைத்தது. திமுகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் யாரும் இதில் கலந்து கொள்ளவில்லை.
2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தால் ஏற்கனவே திமுகவுக்கும், காங்கிரஸுக்கும் இடையே மோதல் இருந்து வந்தது. இது ராசா கைது செய்யப்பட்டபோது சற்று விரிவடைந்தது. தற்போது கருணாநிதியின் மகள் கனிமொழியையும் கைது செய்து சிறையில் அடைத்ததைத் தொடர்நது இரு கட்சிகளுக்கும் இடையிலான உறவு மேலும் கசந்து போய் விட்டது.
இந்த நிலையில் நேற்று 2வது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் 3வது ஆண்டு விழாவையொட்டி டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங் கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கு விருந்தளித்துக் கெளரவிக்கும் நிகழ்ச்சி நடந்தது.
இதில் திமுக கலந்து கொள்ளாமல் புறக்கணிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் டி.ஆர்.பாலு மட்டும் கலந்து கொள்வார் என்று திமுக தலைவர் கருணாநிதி அறிவித்தார். இதையடுத்து நேற்று டெல்லி கிளம்பிச் சென்று நிகழ்ச்சியில் பங்கேற்றார் பாலு.
அவரைத் தவிர வேறு யாரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை.












Click it and Unblock the Notifications