மீண்டும் இந்தியாவை லஷ்கர் தாக்கினார் தெற்காசியாவில் அமைதி குலையும்-அமெரிக்கா
வாஷிங்டன்: மீண்டும் இந்தியாவை லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பு தாக்கினால், இந்தியா, பாகிஸ்தான் மட்டுமல்லாமல் தெற்காசியாவில் அமைதி சீர்குலையும். லஷ்கர் அமைப்பால் இந்தியாவுக்கு மட்டுமல்ல, அமெரிக்காவுக்குமே பெரும் அபாயங்கள் அதிகரித்துள்ளன என்று வெளியுறவுக்கான அமெரிக்க செனட் கமிட்டியின் தலைவர் ஜான் கெர்ரி எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், லஷ்கர் இ தொய்பா அமைப்புதான் 2008ம் ஆண்டு மும்பையில் நடந்த மிகப் பெரிய பயங்கரவாத தாக்குதலுக்கு காரணம். இந்த அமைப்பு மீண்டும் இந்தியாவைத் தாக்குமானால் இந்தியா, பாகிஸ்தானில் மட்டுமல்லாமல் தெற்காசியா முழுவதிலும் அமைதி சீர்குலையும் அபாயம் உள்ளது.
லஷ்கர் இ தொய்பா அமைப்பு இந்தியாவுக்கு மட்டுமல்ல, அமெரிக்காவுக்குமே கூட மிகப் பெரிய மிரட்டலாக உருவெடுத்துள்ளது.
இந்தியா, பாகிஸ்தான் இடையே அணு ஆயுத யுத்தத்தை தூண்டும் வகையில், லஷ்கர் இ தொய்பா அமைப்பு செயல்பட்டு வருகிறது. இரு நாடுகளுக்கும் இடையே போர் மூள வேண்டும் என்ற நோக்கத்துடன்தான் லஷ்கர் இ தொய்பா அமைப்பு செயல்பட்டு வருகிறது.
பாகிஸ்தான் பல தீவிரவாத அமைப்புகளை ஊக்குவித்து வளர்த்து வருகிறது. அதில் ஒன்றுதான் இந்த லஷ்கர் இ தொய்பா என்றார் அவர்.












Click it and Unblock the Notifications