அமைச்சர் மரியம் பிச்சை மரணம்-சிபிசிஐடி விசாரணை தொடங்கியது

மரியம் பிச்சையின் காரை ஓட்டிச் சென்ற சென்னை டிரைவர் ஆனந்த்திடம், சிபிசிஐடி கூடுதல் டிஜிபி அர்ச்சனா ராமசுந்தரம் விசாரணை நடத்தியுள்ளார். மேலும், கார் மீது மோதிய லாரியைப் பிடிக்கும் நடவடிக்கைகளும் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.
கடந்த 23ம் தேதி பெரம்பலூர் அருகே பாடாலூர் என்ற இடத்தில் வைத்து இந்த விபத்து நடந்தது. இதில் மரியம் பிச்சை பலத்த காயத்துடன் உயிரிழந்தார். டிரைவர் ஆனந்த் உள்ளிட்டோர் காயங்களுடன் உயிர் தப்பினர்.
இந்த சம்பவம் மற்றும் விபத்து நேர்ந்த விதம் ஆகியவற்றை வைத்து பல்வேறு சந்தேகங்கள் எழுந்தன. இது திட்டமிட்ட சதியாக இருக்குமோ என்ற சந்தேகமும் வலுத்தது. இதையடுத்து சிபிசிஐடி விசாரணைக்கு முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து தற்போது சிபிசிஐடி போலீஸாரின் விசாரணை தொடங்கியுள்ளது.
பெரம்பலூர் வந்த சிபிசிஐடி கூடுதல் டிஜிபி அர்ச்சனா ராமசுந்தரம், டிரைவர் ஆனந்த்திடம் நேரடியாக விசாரணை நடத்தினார்.
நேற்று விபத்து நடந்த இடத்தை டிஐஜி ஸ்ரீதர் நேரில் பார்த்து ஆய்வு நடத்தினார். சி.பி.சி.ஐ.டி. எஸ்.பி. ராஜேஸ்வரி, 3 டிஎஸ்பிக்கள், 9 இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசாரும், தடய அறிவியல் நிபுணர்களும் வந்திருந்தனர்.
சென்னை மற்றும் திருச்சி, தஞ்சை ஒருங்கிணைந்த மாவட்ட சி.பி.சி.ஐ.டி. போலீசார் அனைவரும் நேற்று பாடாலூர் விரைந்து வந்து அங்கேயே முகாமிட்டுள்ளனர்.
விசாரணை குறித்து டிஐஜி ஸ்ரீதர் கூறுகையில், சில தகவல்கள் கிடைத்துள்ளன. அதை வைத்து விசாரித்து வருகிறோம். மாயமான லாரி எங்கே போனது என்பது குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.
அந்த லாரியைக் கண்டுபிடிக்க 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த லாரி குறித்து சில தகவல்கள் கிடைத்துள்ளன. எனவே விரைவில் அந்த லாரி சிக்கும், டிரைவரையும் பிடித்து விடுவோம்.
அது எந்த வகையான லாரி என்பது தெரியவில்லை. டிரைவர் சிக்கினால்தான் அதுகுறித்துத் தெரியும்.
இப்பகுதியில் உள்ள கல் குவாரி ஏதேனும் ஒன்றில் லாரியை ஒளித்து வைத்திருக்கலாம் அல்லது காட்டுப்பகுதியில் மறைத்து வைத்திருக்கலாம் என சந்தேகிக்கிறோம். அதுகுறித்து தேடுதல் வேட்டை நடந்து வருகிறது என்றார்.
இதற்கிடையே சம்பந்தப்பட்ட லாரி ஆந்திராவில் பதிவு செய்யப்பட்டது என்று ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பான கோணத்திலும் விசாரணை மற்றும் தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டுள்ளது.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications