இந்தியா கொடுத்த 50 பேர் கொண்ட தேடப்படுவோர் பட்டியலை நிராகரித்தது பாக்.
இஸ்லாமாபாத் தப்பும் தவறுமாக இந்தியா கொடுத்திருந்த 50 பேர் கொண்ட அதிகம் தேடப்படுவோர் பட்டியலை பாகிஸ்தான் நிராகரித்து விட்டது.
சமீபத்தில் இந்தியாவால் அதிகம் தேடப்படும் 50 பேரின் பட்டியலை பாகிஸ்தானிடம் அளித்திருந்தது இந்தியா. ஆனால் இதில் இரண்டு பேர் இந்தியாவிலேயே இருப்பது பின்னர் தெரிய வந்து இந்தியாவுக்கு பெரும் அசிங்கிமாகி விட்டது.
அதில் ஒரு நபர் சிறையி்ல் இருப்பதும், இன்னொரு நபர் ஜாமீனில் வெளியில் இருப்பதும், தானேவில் வசித்து வரும் தெரிய வந்தது.
சிபிஐக்கும், உள்துறை அமைச்சகத்திற்கும் இது பெரும் தலைக்குனிவை ஏற்படுத்தி விட்டது. இதையடுத்து புதிய திருத்தப் பட்டியலை விரைவில் அளிப்போம் என்று உள்துறை அமைச்சகம் கூறியிருந்தது.
இந்தநிலையில் இந்தியா கொடுத்திருந்த முதல் பட்டியலை தற்போது பாகிஸ்தான் அரசு நிராகரித்து விட்டது. இந்தப் பட்டியலில் இருப்பவர்கள் இந்தியாவில் இருக்கிறார்களா என்பதை முதலில் விசாரித்துப் பார்க்குமாறு இந்தியாவுக்கு பாகிஸ்தான் உள்துறை அமைச்சகம் அட்வைஸ் கூறி மேலும் நம்மை அசிங்கப்படுத்தியுள்ளது.
இதுகுறித்து பாகிஸ்தான் உள்நாட்டு அமைச்சகம், மத்திய வெளியுறவு அமைச்சகத்திற்கு அனுப்பியுள்ள கடிதத்தில், நீங்கள் எங்களுக்குக் கொடுத்த பட்டியலில் இருப்பவர்கள் இந்தியாவில் வசிக்கிறார்களா என்பதை நீங்கள் முதலில் விசாரித்துப் பாருங்கள். நீங்கள் கொடுத்த பட்டியலில் இருந்த 2 பேர் இந்தியாவிலேயே இருப்பது தெரிய வந்துள்ளது. எனவே மற்ற 48 பேரும் கூட இந்தியாவிலேயே இருக்கலாம். எனவே அதுகுறித்து முதலில் தெளிவாக விசாரணை நடத்தி விட்டுப் பின்னர் எங்களிடம் வாருங்கள் என்று தெரிவித்துள்ளது பாகிஸ்தான்.
இந்தியா கொடுத்திருந்த பட்டியலில் தாவூத் இப்ராகிம், லஷ்கர் இ தொய்பா தலைவன் ஹபீஸ் சயீத், மும்பை தீவிரவாத தாக்குதலில் ஈடுபட்ட பிறமுக்கியத் தீவிரவாத தலைவர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications