For Quick Alerts
For Daily Alerts
Just In
திருவாரூர் அருகே பஸ் ஆற்றில் பாய்ந்து மூழ்கி 6 பேர் பலி
திருவாரூரிலிருந்து ஒரு பேருந்து பயணிகளுடன் மயிலாடுதுறை நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது மயிலாடுதுறை அருகே முடிகொண்டான் என்ற இடத்தில் பஸ் வந்து கொண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி அருகில் இருந்த திருமலைராயனாறு ஆற்றில் கவிழ்ந்தது.
இதில் பஸ் நீரில் மூழ்கியதில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பஸ் ஆற்றில் பாய்ந்ததைப் பார்த்து ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் ஆற்றில் குதித்து பஸ்சில் சிக்கியவர்களை மீட்டனர். தீயணைப்புப் படையினரும் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
காயமடைந்த 30 பேர் திருவாரூர் மற்றும் நன்னிலம் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Comments
English summary
6 passengers were killed as bus capsized in river near Thiruvarur. 30 passengers injured and admitted in hospitals.
Story first published: Friday, May 27, 2011, 18:04 [IST]