ஸ்பெஷல் கிளாஸுக்குப் போகாமலேயே முதலிடத்தைப் பெற்று சாதித்த நித்யா
Subscribe to Oneindia Tamil
ஸ்ரீவில்லிபுத்தூர்: நான் பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வில் முதலிடத்தைப் பிடிப்பேன் என்று எதிர்பார்த்திருந்தேன், அதன்படியே நடந்துள்ளது. மேலும் தேர்வுக்காக நான் ஸ்பெஷல் கிளாஸுக்கெல்லாம் போகவில்ல என்று கூறியுள்ளார் ஸ்ரீவில்லிபுத்தூர் மாணவி நித்யா.
500க்கு 496 மதிப்பெண்கள் எடுத்து மாநில அளவில் ஐந்து பேர் முதலிடத்தைப் பிடித்துள்ளனர். அந்த ஐவரில் ஒருவர் நித்யா. இவர் ஸ்ரீவில்லிபுத்தூர் சேக்ரட் ஹார்ட் மேல்நிலைப்பள்ளியில் படித்த மாணவி.
தனது சாதனை குறித்து நித்யா கூறுகையில்,நான் ஸ்பெஷல் கிளாஸுக்கெல்லாம் போகவில்லை. டிவி பார்க்காமல் தவிர்த்து படிப்பில் மட்டும் கவனம் செலுத்தினேன். முதலிடத்தைப் பிடிப்பேன் என்பது நான் எதிர்பார்த்ததுதான்.
எனது பள்ளி தாளாளர், தலைமை ஆசிரியர் ஆகியோர் எனக்கு மிகவும் உறுதுணையாக இருந்தனர். இதனால்தான் என்னால் சாதிக்க முடிந்தது என்றார் தி்வ்யா.
டாக்டராக வேண்டும் என்பதுதான் திவ்யாவின் லட்சியமாம்.













Click it and Unblock the Notifications