கோவையில் திருமண மண்டபத்தில் 70 பவுன் நகைகள் திருட்டு
கோவை: கோவையில் தொழிலதிபர் இல்ல திருமண நிகழ்ச்சியில் 70 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது.
திருமணவிழா
கோவை சாயிபாபா காலனியைச் சேர்ந்த தொழிலதிபர் அழகிரிசாமி. இவரது மகன் மஞ்சுநாத்தின் திருமணவிழா ஆவாரம்பாளையத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடந்துகொண்டிருந்தது. இதனையொட்டி, வியாழக்கிழமை அன்று மாப்பிள்ளை அழைப்பு வைபம் நடந்துகொண்டிருந்தது. இருவீட்டார் சார்பிலும் ஏராளமான விருந்தினர்கள் கலந்துகொண்டனர்.
மணமகன் அறையில் மாயமான நகைகள்
மணமகன் அறையில் உள்ள பீரோவில் மணமகனின் தாயார் மற்றும் சித்தியின் நகைகள் வைக்கப்பட்டிருந்தன. மாப்பிள்ளை அழைப்பு மற்றும் வரவேற்பு முடிந்து மணமகன் அறைக்கு திரும்பி வந்தபோது பீரோ உடைக்கப்பட்டிருந்தது. அங்கிருந்த வளையல்கள், நெக்லஸ், மோதிரம் என 70 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன.
போலீசில் புகார்
இதனையடுத்து அழகிரிசாமி ரேஸ்கோர்ஸ் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். திருட்டு நடந்த இடத்தை போலீசார் பார்வையிட்டனர். வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். கடந்த சில நாட்களுக்கு முன் சிங்காநல்லூரில் ஒரு திருமண மண்டபத்தில் 16 சவரன் நகை கொள்ளை போனது. கோவையின் பல்வேறு பகுதிகளிலும் தங்க நகைகளை குறிவைத்து பல திருட்டு சம்பவங்கள் நடந்து வருகின்றன. கொள்ளை கும்பலின் அட்டகாசத்தை தடுக்க முடியாமல் மாநகர காவல் தடுமாறுகிறது.












Click it and Unblock the Notifications