போதையில் பாட்டியை உயிரோடு எரித்துக் கொன்ற பேரன் கைது
சங்கரன்கோவில்: சங்கரன்கோவிலில் மனைவியுடன் சண்டை போட்ட பேரனை தட்டிக் கேட்ட பாட்டி தீ வைத்து எரித்து கொலை செய்யப்பட்டார்.
சங்கரன்கோவில் திருப்பூர் குமரன் நகர் அருகில் கந்தவேல் மகன் பாதாள முத்துகுமார் வசித்து வருகிறார். இவர் மினி பஸ்சில் கண்டரக்டராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி கந்தம்மாள். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இவரது வீட்டிற்கு பக்கத்து வீட்டில் தான் அவரது பாட்டி பாதாள முத்தம்மாள் தனியாக வசித்து வந்தார். தினமும் வேலை முடிந்து இரவில் வீட்டிற்கு வரும் முத்துகுமார் குடித்து வி்ட்டு வந்து மனைவியுடன் சண்டை போடுவது வழக்கம். அப்போது முத்தமாள் வந்து பேரனை கண்டிப்பதுண்டு. நேற்று முன்தினம் வழக்கம்போல் முத்துகுமார் வேலை முடிந்து வீ்ட்டிற்கு வந்தபோது குடித்து விட்டு வந்து மனைவி கந்தமாளிடம் குடிப்பதற்கு பணம் கேட்டுள்ளார். கந்தம்மாள் பணம் தர மறுத்ததும் ஆத்திரமடைந்த முத்துகுமார் மனைவியை அடித்துள்ளார்.
இதனால் மனமுடைந்த கந்தம்மாள் குழந்தைகளை தூக்கிக்கொண்டு வீட்டை விட்டு வெளியில் சென்றுவிட்டார். இது தெரிந்து பாட்டி முத்தம்மாள் பேரன் வீ்ட்டிற்கு வந்து சத்தம் போட்டுள்ளார். அப்போது நேரம் நள்ளிரவு 12.15 மணி. பாட்டி திட்டியதால் முத்துகுமார் ஆத்திரத்தில் ஓங்கி அடித்துள்ளார். இதில் முத்தம்மாள் கீழே விழுந்துள்ளார். உடனே அருகில் இருந்த மண்ணெண்ணெயை எடுத்து முத்துகுமார் பாட்டி முத்தம்மாள் மீது ஊற்றி தீ வைத்ததாக கூறப்படுகிறது. இதில் முத்தம்மாள் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக இறந்தார். இது குறித்து முத்தம்மாளின் மகன் முத்துபாண்டி போலீசில் புகார் செய்தார். இது தொடர்பாக சங்கரன்கோவில் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
பின்னர் முத்துகுமாரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படு்த்தி சிறையில் அடைத்தனர்.












Click it and Unblock the Notifications