தென்காசி அருகே ரூ. 43 லட்சம் கள்ளநோட்டுகள் பறிமுதல்: 6 பேர் கைது

Subscribe to Oneindia Tamil

தென்காசி: தென்காசி அருகே ரூ. 43 லட்சம் கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

தென்காசி அருகேயுள்ள கடையநல்லூர் பகுதியில் கள்ள நோட்டு கும்பல் நடமாட்டம் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து தனிப்படை எஸ்ஐ ஆடிவேல் தலைமையில் ஒரு குழுவினர் கடந்த வாரம் கடையநல்லூரைச் சேர்ந்த 3 பேரை கைது செய்தனர். அவர்கள் கொடுத்த தகவலை வைத்து முக்கிய நபர்களை வலைவீசி தேடி வந்தனர்.

இந்நிலையில் இக்கும்பலின் தலைவன் ரத்னசாமி என்பவன் பாவூர்சத்திரம் அருகே இருப்பது அறிந்த போலீசார் அவரை கைது செய்தனர். அப்போது அவரிடம் ரூ. 43 லட்சம் கள்ள நோட்டுகள் கொண்ட சூட்கேட்ஸ் இருந்தது. அதை பறிமுதல் செய்து விசாரித்தனர்.

அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் மேலும் 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் கள்ள நோட்டு அச்சடிக்க பயன்படுத்திய கம்யூட்டர், கலர் பிரிண்டர், கலர்ஜெராக்ஸ் உளளிட்ட இயந்திரங்களையும் பறிமுதல் செய்தனர். இது குறித்து நெல்லை எஸ்பி விஜயேந்திர பிதாரி நேரில் பார்வையிட்டு கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+