வரத்து அதிகரிப்பு: மல்லிகைப் பூ விலை சரிவு
Subscribe to Oneindia Tamil
தர்மபுரி: தர்மபுரியில் அமோக விளைச்சல் காரணமாக மல்லிகைப் பூ விலை திடீரென சரிந்துள்ளது.
தர்மபுரி மாவட்டத்தில் சுமார் ஆயிரத்து 400 ஏக்கரில் மல்லிகைப் பூக்களை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். இந்த ஆண்டு மல்லிகைப் பூ அமோகமாக விளைந்துள்ளது. இதனால் சந்தைக்கு வரத்து அதிகரித்துள்ளது.
தற்போது மல்லிகைப் பூ சீசன் என்பதால், தினமும் 1 டன் பூ சந்தைக்கு வருகிறது. இதனால் விலையும் தொடர்ந்து சரிந்து வருகிறது.
கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஒரு கிலோ மல்லிகை பூ ரூ. 800 முதல் 1000 வரை விற்பனையானது.
தற்போது அதே மல்லிகைப் பூ ஒரு கிலோ ரூ. 125 முதல் 150 வரை விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை சரிவால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். ஆனால் பெண்கள் மகிழச்சி அடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications