புதுவை சட்டசபையின் தற்காலிக சபாநாயகராக தியாகராஜன் நியமனம்
புதுச்சேரி: இன்னும் ஒரு அமைச்சர் கூட பதவியேற்காமல் உள்ள புதுச்சேரியில், தற்காலிக சபாநாயகராக தியாகராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்துடன் சேர்த்து புதுவைக்கும் தேர்தல் நடந்தது. அதில் என்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைமையிலான கூட்டணி பெரும் வெற்றி பெற்றது. மொத்தம் உள்ள 30 தொகுதிகளில் 20 தொகுதிகளை இக்கூட்டணி வென்றது.
இதையடுத்து என்.ரங்கசாமி முதல்வராகப் பதவியேற்றார். ஆனால் இன்னும் அமைச்சரவை பதவியேற்கவில்லை. ஒரு அமைச்சர் கூட நியமிக்கப்படாமல் உள்ளது. என்.ஆர். காங்கிரஸுக்கும், அதிமுகவுக்கும் இடையே வெடித்துள்ள பூசல் காரணமாக அமைச்சரவையை நியமிக்க முடியாமல் திண்டாடிக் கொண்டிருக்கிறார் ரங்கசாமி.
இந்த நிலையில் தற்போது தற்காலிக சபாநாயகராக டி.தியாகராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான ஒப்புதலை துணை நிலை ஆளுநர் இக்பால் சிங் அளித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து அவருக்கு நாளை இக்பால் சிங் பதவிப்பிரமாணம் செய்து வைப்பார். அதைத் தொடர்ந்து சட்டசபை கூட்டப்பட்டு பிற உறுப்பினர்களுக்கு தியாகராஜன் பதவிப்பிரமாணம் செய்து வைப்பார். அதன் பின்னர் ஆளுநர் உரையுடன் சட்டசபைக் கூட்டம் நடைபெறும்.
இந்த நிலையில் எப்போது அமைச்சரவை அமையும் என்பது தொடர்ந்து பெரும் மர்மமாக உள்ளது. இதுகுறித்து ரங்கசாமி தரப்பில் எந்த செய்தியும் காணவில்லை.












Click it and Unblock the Notifications