பி.இ., பி.டெக். படிப்புகளுக்கான விண்ணப்பம் பெற இன்று கடைசிநாள்
நெல்லை: பி.இ., பி.டெக். படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் பெற இன்று கடைசி நாளாகும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜூலை 3-ம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும்.
தமிழகத்தில் பி.இ., பி.டெக். படிப்புகளுக்கான இடங்கள் அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் கவுன்சிலிங் மூலம் நிரப்பப்படுகிறது. அரசு பொறியியல் கல்லூரிகள், அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், தனியார் சுயநிதி கல்லூரிகளில் அரசு ஓதுக்கீட்டு இடங்கள் கவுன்சிலிங் மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன.
இதற்கான விண்ணப்ப வினியோகம் கடந்த 16-ம் தேதி தொடங்கியது. நெல்லையில் நெல்லை புதிய பஸ் நிலையம் அருகே சுந்தரி காம்பிளக்ஸில் அமைந்துள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகம், நெல்லை அரசு பொறியியல் கல்லூரி, பேட்டை ராணி அண்ணா மகளிர் கல்லூரி ஆகிய மூன்று இடங்களில் விண்ணப்பங்கள் வினியோகம் செய்யப்படுகின்றன.
விண்ணப்பங்கள் பெற இன்று தான் கடைசி நாள் ஆகும். விண்ணப்பங்களுடன் சான்றிதழ்கள் நகல்கள் மற்றும் தேவையானவற்றை இணைத்து ஜூலை 3-ம் தேதிக்குள் அண்ணா பல்கலைகழகத்திற்கு அனுப்ப வேண்டும்.












Click it and Unblock the Notifications