தொழில்நுட்பக் கோளாறு: மும்பையில் தரையிறங்கிய சவுதி விமானம்-270 பேர் உயர் பிழைப்பு
Subscribe to Oneindia Tamil
மும்பை: தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மும்பையில் இருந்து ஜெத்தாவுக்கு புறப்பட்ட சவுதிஅரேபியா விமானம் அவசரமாக மும்பை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.
சவுதிஅரோபியா விமானம் ஒன்று நேற்று முன்தினம் காலை மும்பையில் இருந்து ஜெத்தாவுக்கு புறப்பட்டது. ஆனால் விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே தொழில்நுட்பக் கோளாறு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே விமானி விமானத்தை மும்பை சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கினார்.
இதனால் விமானத்தில் இருந்த 270 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த சம்பவம் குறி்த்து தகவல் அறிந்ததும் கோளாறை சரி செய்ய சவுதிஅரேபியாவில் இருந்து தொழில்நுட்ப நிபுணர்கள் வந்தனர்.












Click it and Unblock the Notifications