வேலூர் முன்னாள் எம்.எல்.ஏ. ஞானேசேகரனுக்கு கொலை மிரட்டல் - காவல் நிலையத்தில் புகார்
வேலூர்: வேலூர் சட்டமன்ற தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. ஞானேசேகரனுக்கு மர்ம நபர்கள் செல் போனில் கொலை மிரட்டல் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் காங்கிரஸ் கட்சி முன்னாள் எம்.எல்.ஏ. ஞானேசேகரன். இவர் தொடர்ந்து 4 முறை எம்.எல்.ஏ.வாக இருந்து வந்தார். சமீபத்தில் நடந்த தேர்தலில் இவர் படு தோல்வியைச் சந்தித்தார்.
ஞானசேகரன், விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு எதிரான கடுமையான நிலைப்பாட்டைக் கொண்டவர். இவர் விடுதலை புலிகளுக்கு எதிரான கருத்துக்களை அவ்வப்போது பேசி வந்ததால் அவரது உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறி அவருக்கு எக்ஸ் 4 பிரிவின் கீழ் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டது. இந்த பாதுகாப்பு பணியில் 4 போலீசார் ஈடுபட்டு வந்தனர்.
சட்ட மன்ற தேர்தல் முடிந்து அதிமுக பதவியேற்ற பின்பு அவரது பாதுகாப்புக்கு துப்பாக்கி ஏந்திய ஒரு போலீஸ் மட்டும் போட்டப்பட்டுள்ளது. மேலும், அவருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு போலீசாரின் வாகனம் திரும்ப பெறப்பட்டது. இந்த நிலையில் முன்னாள் எம்.எல்.ஏ. ஞனசேகரன் சத்துவாச்சாரி காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார்.
அதில் அவர் கூறியுள்ளதாவது,
எனக்கு வெளிநாட்டில் இருந்து செல்போன் மூலம் நேற்று போன் வந்தது. அதில் பேசிய மர்ம நபர் கொலை மிரட்டல் விடுத்தார். இதே போல 3 முறை போனில் மிரட்டினார். எனவே, எனக்கு கொலை மிரட்டல் விடுத்த நபரை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் அந்த புகாரில் தெரிவித்துள்ளார்.
இந்த புகார் குறித்து சத்துவாச்சாரி போலீசார் வழக்கு பதிவு செய்து ஞானசேகரனுக்கு கொலை மிரட்டல் நபர் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகினறனர்.
-
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications