ஊட்டியில் கன மழை; வீடுகளில் வெள்ளம் புகுந்தது!

Subscribe to Oneindia Tamil

ஊட்டி: ஊட்டியில் விடிய விடிய கனமழை பொழிந்தது. இதனால் பல வீடுகளில் வெள்ளம் புகுந்தது.

கன மழை

ஊட்டியில் நேற்று முன் தினம் இரவு முதல் மழை இடைவிடாமல் பெய்தது. இதனால், தாழ்வான பகுதிகளான கிரீன் பீல்ட்ஸ், அக்ரஹாரம், ரயில் நிலையம், காந்தல் ஆகிய பகுதிகளில் உள்ள பல வீடுகளில் வெள்ளம் புகுந்தது. கலெக்டர் அலுவலகம் உள்ள டேவிஸ் பூங்காவில் மரம் உடைந்து மின் கம்பம் மீது விழுந்ததால், மின் தடை ஏற்பட்டது. தாவரவியல் பூங்காவில் நாற்றங்கால் நர்சரி மீது மரம் விழுந்ததால் பசுமைக்குடில் சேதம் அடைந்தது.

மாவட்டம் முழுவதும்

தேவாலா, குன்னூர், கூடலூர், கேந்தா, கோத்தகிரி, கல்லட்டி, கிளன்மார்கன், அவலாஞ்சி, கோடநாடு ஆகிய பகுதிகளிலும் நல்ல மழை பெய்துள்ளது.

சுற்றுலா பயணிகள்

ஊட்டியிலிருந்து சுற்றுலா பயணிகள் தங்களது டூரை முடித்துக்கொண்டு அவசர அவசரமாக ஊர் திரும்பி வருகின்றனர். இம்மாதம் முழுவதும் பருவமழை இருக்கும் என்பதால் விவசாயிகள் விவசாயத்துக்கான ஆயத்தங்களை செய்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+