நட்ட நடு ராத்திரியில் பற்றியெரியும் வாகனங்கள் - கலங்கி நிற்கும் காவல்துறை
கோவை : கோவையில் நள்ளிரவில் வாகனங்கள் கொளுத்தப்படுவது தொடர்கதையாகிறது. நகரின் மையப்பகுதியில் நேற்றிரவு 5 இருசக்கர வாகனங்கள் கொளுத்தப்பட்டன.
நள்ளிரவு குற்றங்கள்
கோவையில் கடைத்தெருவில், நகை பட்டறைகள் மற்றும் வீடுகள் முன் நிறுத்தப்படும் டூ வீலர்கள் மற்றும் கார்கள் நள்ளிரவில் தீ வைத்து எரிக்கப்படுகின்றன.
கடந்த 3 மாதங்களில் மட்டும் இதுவரை 10 வாகனங்களுக்கும் மேல் எரிக்கப்பட்டுள்ளன. மர்ம நபர்கள் வாகனங்கள் மீது பெட்ரோல் ஊற்றி கொளுத்தி விட்டு தலைமறைவாகி விடுவதாக போலீஸ் விசாரணையில் கண்டு பிடிக்கப்பட்டது. ஆனாலும், இதுவரை தீ வைக்கும் சமூக விரோதிகளை போலீசாரால் பிடிக்கவில்லை.
இதைப்போலவே, நடைபாதையில் தூங்கிக்கொண்டிருந்த ஒரு பிச்சைக்காரர், வணிக வளாகத்தில் தூங்கிக்கொண்டிருந்த காவலாளி ஆகியோர் தலை மீது கல்லைப் போட்டு கொலை செய்யப்பட்டனர். இந்த நடுநிசிக்கொலைகளைச் செய்தவர்களையும் காவல்துறையால் கண்டுபிடிக்க முடியவில்லை.
5 வாகனங்கள் எரிக்கப்பட்டன
இந்நிலையில் நேற்றும் 5 வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. நேற்று அதிகாலையில்பாப்பநாயக்கன்பாளையம் பழையூர் பகுதியில் 4 பைக்குகளும், ஒரு ஸ்கூட்டரும் கொளுத்தப்பட்டுள்ளன.
பழையூர் சீர்காளியம்மன் கோவில் வீதியில் டூ வீலர் ஒர்க்ஷாப் நடத்தி வரும் செந்தில்குமாரின் ஓர்க் ஷாப் முன்பு நிறுத்தப்பட்டிருந்த இரண்டு பைக்குகள், ரங்கம்மாள் கோவில் வீதியைச் சேர்ந்த கோவை மாநகர போலீலீசில் பணியாற்றும் சங்கர் கணேஷ், இதே வீதியில் வசிக்கும் ரெசிடென்ஸி ஓட்டல் ஊழியர் கார்த்திகேயன் ஆகியோரின் பைக்குகளும் எரிக்கப்பட்டன.
தவிர, மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்த அருணாச்சலம் என்பவரது பைக்கும் எரிக்கப்பட்டது. ஒரே நேரத்தில் 3 வீதிகளில் 5 வாகனங்கள் கொளுத்தப்பட்ட சம்பவம் இப்பகுதி மக்களை பயத்தில் ஆழ்த்தியுள்ளது.
விசாரணை
வாகனங்கள் எரிக்கப்பட்டது தொடர்பாக கோவை ரேஸ்கோர்ஸ் பகுதி போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.
-
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி












Click it and Unblock the Notifications