ராம்தேவ் கைதைக் கண்டித்து காந்தி சமாதியில் 24 மணி நேர சத்தியாகிரகப் போராட்டம்-பாஜக
டெல்லி : பாபா ராம்தேவ் கைதைக் கண்டித்து காந்தி சமாதி அமைந்துள்ள ராஜ்காட்டில் 24 மணி நேர சத்தியாகிரகப் போராட்டம் நடத்தப்படும் என பாஜக அறிவித்துள்ளது.
ராம்தேவ் கைதைத் தொடர்ந்து டெல்லியில் அசாதாரண சூழ்நிலை நிலவுகிறது. இன்று முற்பகல் பாஜக தலைவர் நிதின் கத்காரி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், இது எமர்ஜென்சி காலத்தை நினைவுபடுத்துகிறது. ஜனநாயகத்தின் மீது காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை போலீஸார் நடத்தியுள்ளனர்.
பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோரின் உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையைக் கண்டித்து பாஜக சார்பில் 24 மணி நேர சத்தியாகிரகப் போராட்டம் நடத்தப்படும். மகாத்மா காந்தி சமாதி அமைந்துள்ள ராஜ்காட்டில் இன்று இரவு 7 மணிக்கு இந்த சத்தியாகிரகப் போராட்டம் தொடங்கும். இதில் நான், அத்வானி, ராஜ்நாத் சிங், சுஷ்மா சுவராஜ் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்போம் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications