திருப்பதியில் சிறுமி பலாத்காரம்-தேவஸ்தான ஊழியர் கைது
திருப்பதி: திருப்பதியில் 13 வயது சிறுமியை பலாத்காரம் செய்த திருமலை தேவஸ்தான ஊழியர் கைது செய்யப்பட்டார்.
ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் பெஸ்டவாரி பேட்டையை சேர்ந்த சிறுமி அனிதா (வயது 14-பெயர் மாற்றப்பட்டுள்ளது) 8ம் வகுப்பு படித்து வருகிறார். அவர் சமீபத்தில் தனது தாயுடன் சண்டை போட்டுக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறி பஸ் திருப்பதி சென்றார்.
திருமலையில் பக்தர்கள் தகவல் மையம் அருகே தனியாக நின்று கொண்டிருந்த சிறுமியிடம் தேவஸ்தான பாதுகாவலர் டில்லி பாபு (50) பேச்சு கொடுத்தார். சிறுமியை ஹோட்டலுக்கு அழைத்து சென்று சாப்பாடு வாங்கிக் கொடுத்தார்.
பின்னர் பாதுகாப்பு அலுவலகம் பின்புறம் உள்ள ஓய்வு அறைக்கு வந்து தூங்குமாறு கூறி அழைத்துச் சென்று சிறுமியை கற்பழித்துள்ளார். அவரிடமிருந்து தப்பிய சிறுமி வெளியே அலறிக் கொண்டு ஓடி வரவே, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ்காரர் சிறுமியிடம் விசாரித்தார்.
சிறுமி தந்த தகவலால் அதிர்ந்த அவர் உடனே அவளை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று வழக்குப் பதிவு செய்து, டில்லிபாபுவை கைது செய்தார். இதையடுத்து டில்லிபாபு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
சிறுமியின் பெற்றோரை வரவழைத்து அவள் ஒப்படைக்கப்பட்டார். பாதிக்கப்பட்ட அந்தச் சிறுமிக்கு ரூ.2 லட்சம் உதவித் தொகை வழங்கப்படும் என்று திருப்பதி திருமலை தேவஸ்தானம் அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications