18 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் நாங்கள் பூப்படைந்துள்ளோம்-நாஞ்சில் சம்பத்

சென்னை செங்குன்றத்தில் மதிமுக 18வது ஆண்டு தொடக்க விழாக் கூட்டம் நடந்தது. அதில் கலந்து கொண்டு நாஞ்சில் சம்பத் பேசுகையில்,
ம.தி.மு.க.,விற்கு வயது 18. நாங்கள் இப்போது தான் பூப்படைந்திருக்கிறோம். தொண்டர்களின் எழுச்சியால் துவங்கப்பட்ட, எங்கள் கட்சியில் யாரும் பிறந்த நாளை கொண்டாடுவதில்லை. ஆனால், எங்கள் இயக்கத்தின் பிறந்த நாளை தவறாமல் கொண்டாடுகிறோம். தமிழகத்தில் பல கட்சிகள் அடையாளமின்றி அழிந்து போய்விட்டன.
எங்களுக்கு பத்திரிகை பலம், ஊடகங்களின் செல்வாக்கு, சினிமா நடிகர், நடிகையர் மூலமான விளம்பரம் என்று எதுவுமில்லை. எங்களிடம் இருந்த ஒரே சினிமா தயாரிப்பாளரும் ஓடிவிட்டார்.
போட்டியிட்டிருக்கலாம். ஆனால், வீண் பழிகள் வந்திருக்கும். அதனால் தான் நாங்கள் சட்டசபை தேர்தலில் போட்டியிடாமல் புறக்கணித்தோம். தமிழகத்திற்கு வைகோவின் தலைமை தேவை என்பதை மக்கள் உணரத் துவங்கிவிட்டனர். இந்நிலையில், தி.மு.க.,விற்கு மாற்றாக வைகோ தலைமையிலான ம.தி.மு.க., செயல்படுகிறது என்றார் அவர்.












Click it and Unblock the Notifications