டெல்லி: பாபா ராம்தேவ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் நள்ளிரவில் வெளியேற்றப்பட்ட சம்பவம் துரதிர்ஷ்டவசமானது. இருப்பினும் அதைத் தவிர வேறு வழியில்லாததால்தான் அந்த நடவடிக்கைக்கு தேவை ஏற்பட்டது என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.
பாபா ராம்தேவ் விவகாரத்தால் மத்திய அரசுகக்கும், பிரதமர் மன்மோகன் சிங்குக்கும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கும் பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் குவிந்தவண்ணம் உள்ளன. இதனால் மத்திய அரசுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில் இந்த விவகாரம் தொடர்பாக வழக்கம் போல வாய் மூடி மெளனியாக இருந்து வந்த பிரதமர் நேற்று வாய் திறந்து விளக்கம் அளித்தார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்,
இந்த நடவடிக்கை துரதிர்ஷ்டவசமானது. அதேசமயம், இதைத் தவிர வேறு வழி இல்லை என்பதையும் பார்க்க வேண்டும்.
ஊழலை ஒழிப்பதில் அரசு முழுமையான, உண்மையான அக்கறையுடன்தான் உள்ளது. கருப்புப் பணம், ஊழல் ஆகியவற்றை ஒழிக்க நாங்கள் கடுமையாக முயன்று வருகிறோம். அதில் எந்த சந்தேகமும் கிடையாது. இருப்பினும் எந்தவித மாயாஜாலத்தையும் உடனடியாக எதிர்பார்க்க முடியாது என்று பிரதமர் கூறியுள்ளார்.
Breaking his silence on the police action at Ramdev's protest congregation, Prime Minister Manmohan Singh said it was "unfortunate" but unavoidable. In his first comments on the issue, the Prime Minister Singh, who has been accused of mishandling the situation, said, "It is unfortunate that operation had to be conducted but quite honestly, there was no alternative." He asserted that his government was concerned and serious about fighting corruption but maintained that there was "no magic wand" when his comments were sought by reporters on the much-criticised midnight police action to disrupt Ramdev's anti-corruption protest at Ramlila Maidan.