இலவசங்களை வழங்கிய பின் உள்ளாட்சி தேர்தலை நடத்த அதிமுக முடிவு?
நெல்லை: தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணி அறிவித்த இலவசங்களை வழங்கிய பின் உள்ளாட்சி தேர்தலை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தில் அதிமுக கூட்டணி சட்டசபை தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளான இலவச கிரைண்டர், பேன், மிக்சி, மாணவர்களுக்கு லேப்டாப் ஆகிய திட்டங்களை ஆளுநர் உரையில் அறிவித்து வரும் செப்டம்பர் மாதம் 15-ம் தேதி பேரறிஞர் அண்ணா பிறந்த நாளான்று முதல் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 1-ம் தேதி முதல் இலவச அரிசி, திருமணத்துக்கு ரூ. 25 ஆயிரத்துடன் தாலிக்கு தங்கம், 23 லட்சம் முதியோர், மாற்று திறனாளிகள் பயன்பெறும் வண்ணம் மாத உதவித் தொகை ரூ.1000 போன்ற திட்டங்களை உடனடியாக செயல்படுத்தியது.
மேலும் வரும் அக்டோபர் மாதம் 20-ம தேதியுடன் உள்ளாட்சிகளின் பதவிக்காலம் முடிவடைவதால் ஆகஸ்ட் மாதம் தேர்தல் அறிவிப்பு வெளியிட்டு செப்டம்பர் மாதம் தேர்தல் நடத்தப்பட வேண்டும். ஆனால் தற்போது இலவச திட்டங்கள் வழங்கப்பட வேண்டிய நிலை உள்ளதால் தேர்தல் ஜனவரி மாதம் வரை தள்ளிப் போகும் சூழல் ஏற்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி தமிழகம் முழுவதும் வழங்கப்பட உள்ள இலவச பொருட்கள் உள்ளாட்சி உறுப்பினர்களை கொண்டு வழங்காமல் அந்தந்த நகர, ஒன்றிய, கிளை கழக அதிமுக நகரச் செயலாளர்கள் மேற்பார்வையில் வார்டு செயலாளர்கள் மூலம் வழங்கவும் கட்சி தலைமை ஆலோசனை நடத்தி உள்ளதாகவும், அப்படி கட்சிகாரர்களை கொண்டு இலவச பொருட்கள் வழங்கும்போது அதி்முக கூட்டணி மொத்த உள்ளாட்சி பதவிகளையும் கைப்பற்ற முடியும் என்பதால் இத்திட்டத்தை அமுல்படுத்த ஆலோசனை நடத்தியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
உள்ளாட்சியில் பணநாயகத்தை எதிர்கட்சிகள் கட்டவிழ்த்து விடக்கூடும். இதை எல்லாம் சமாளிக்க வேண்டுமானால் இலவச திட்டங்களை வாக்காளர்களின் கரங்களுக்கு கொண்டு சென்ற பிறகு உள்ளாட்சி தேர்தலை முழு பலத்தோடு சந்திக்க அதிமுக தலைமை முடிவு செய்துள்ளதாகவும், இதே நி்லை நாடாளுமன்ற தேர்தல் வரை வாக்காளர்களை திசை மாறவிடாமல் தடுக்கும் என்பதும் அதிமுக தலைமையின் திட்டம் என்று தகவல்கள் கிடைத்துள்ளன.
மொத்தத்தில் அதிமுக அரசின் திட்டங்கள் எளிதாக மக்களை சென்றடையும் வண்ணம் அதிகாரிகள் சுறுசுறுப்பாக பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
“பாஜகவுக்கு ஒரு தொகுதியை விட்டுக் கொடுத்துட்டேன்”.. கூலாக சொன்ன புதிய நீதிக்கட்சி தலைவர் AC சண்முகம் -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல் -
170ஐ தாண்டி.. சிக்ஸர் அடிக்கும்.. திமுகதான் மீண்டும்.. அப்போ தவெக, அதிமுக? 3 சர்வே ரிப்போர்ட்ஸ்! -
தவெக கட்சியினருக்கு ஷாக்! கரூர் வழக்கில் கைதாகி ஜாமீனில் இருந்த மாசி பவுன்ராஜ் அதிமுகவில் இணைந்தார்! -
இலவச திட்டங்களுக்கு எத்தனை கோடி செலவாகும்? திமுக.. அதிமுக.. தவெக..? யார் டாப்? -
ஏ.சி.சண்முகம் கட்சிக்கு அதிர்ச்சி கொடுத்த பாஜக தலைமை.. தாமரை சின்னத்தில் போட்டியிட சீட் இல்லை! -
கொத்தாக காலியாகும் டெபாசிட்.. தவெக விஜய்க்கு பெரிய சிக்கல்.. 3 பெரிய சர்வேவில் இருக்கும் வார்னிங்! -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு












Click it and Unblock the Notifications