திமுக எம்எல்ஏக்களுக்கு ஒரே பகுதியில் இடம் தர சபாநாயகர் மறுப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை: திமுக எம்.எல்.ஏக்களுக்கு சட்டசபையில் ஒரே பகுதியில் இடம் தர சட்டசபை விதிமுறைகள் இடம் தரவில்லை என்று சபாநாயகர் ஜெயக்குமார் கூறியுள்ளதாக சட்டசபை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், சட்டசபையில் திமுக எம்எல்ஏக்களை நேற்று சிலர் அச்சுறுத்தியுள்ளனர். எனவே திமுக எம்எல்ஏக்கள் அனைவருக்கும் ஒரே பகுதியில் இருக்கைகள் ஒதுக்குமாறு கோரிக்கை விடுத்தோம். ஆனால் பேரவைத் தலைவர் அதற்கு மறுத்து விட்டார்.
பேரவை விதிகளின்படிதான் இருக்கைகள் ஒதுக்க முடியும் என்று தெரிவித்து விட்டார் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications