பாகிஸ்தானில் நடந்த பயங்கர மோதலில் 8 ராணுவத்தினர், 12 தீவிரவாதிகள் பலி
இஸ்லாமாபாத்: தெற்கு வஜீரிஸ்தான் பழங்குடியினப் பகுதியில் நடந்த மோதலில் 8 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் மற்றும் 12 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
தெற்கு வஜீரிஸ்தான் பழங்குடியினப் பகுதியில் உள்ள சோதனைச் சாவடியை தாலிபான் ஆதரவுக் கும்பல் தாக்கியது. அவர்கள் அதிநவீன கருவிகளையும், ராக்கெட்களையும் வைத்து தாக்கினர். சுமார் 3 மணி நேரம் நீடித்த இந்த தாக்குதலில் 8 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். ராணுவத்தினரின் தாக்குதலில், 12 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
சுமார் 100 தீவிரவாதிகள் இந்த தாக்குதலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகின்றது. கடந்த சில நாட்களுக்கு முன் தெற்கு வஜீரிஸ்தான் பகுதியில் தான் தீவிரவாதி இலியாஸ் காஷ்மீரி கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
பின் லேடன் கொல்லப்பட்டதற்கு பழிவாங்கப் போவதாக தீவிரவாதிகள் ஏற்கனவே சூளுரை எடுத்துள்ளனர். இந்த நிலையில் தான் இந்த தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது.












Click it and Unblock the Notifications