ஸ்வான், யூனிடெக் நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்பட அதிகாரிகளை மிரட்டினார் ராசா-சிபிஐ
டெல்லி: 2ஜி லைசென்ஸ் விவகாரத்தில் ஸ்வான் டெலிகாம் மற்றும் யூனிடெக் ஆகிய நிறுவனங்களுக்கு முன்னுரிமை தர வேண்டும் என்று முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராசாவும், அவரது உயர் மட்ட அதிகாரிகளும், பிற அதிகாரிகளை நெருக்கி, மிரட்டி, நிர்ப்பந்தம் செய்ததாக சிபிஐ தெரிவித்துள்ளது.
ஜேபிசி விசாரணைக்கு ஆஜரானபோது இதுகுறித்த விவரங்களை சிபிஐ இயக்குநர் ஏ.பி. சிங் தெரிவித்துள்ளார்.
ஸ்வான் டெலிகாம் மற்றும் யூனிடெக் நிறுவனங்களுக்கு சாதகமாக செயல்பட வேண்டும் என்று ராசாவும், அவரது ஆதரவு உயர் அதிகாரிகளும் தீவிரமாக செயல்பட்டனர். தங்களுக்குக் கீழ் உள்ள அதிகாரிகளுக்கும் அவர்கள் இதை கண்டிப்புடன் கூறியிருந்தனர். சிலரை மிரட்டவும் செய்தனர். பலரை நிர்ப்பந்தப்படுத்தியுள்ளனர்.
ஸ்வான் டெலிகாமுக்கு முக்கியத்துவம் தராமல், முன்னுரிமை அடிப்படையில், டாடா டெலிசர்வீஸ் நிறுவனத்தின் கோப்புகளை தயாரித்த இரு அதிகாரிகளை ராசாவின் தனிச் செயலாளர் சந்தோலியாவின் உத்தரவின்பேரில், தொலைத் தொடர்புத்துறை செயலாளராக இருந்த சித்தார்த் பெஹுரியா இடமாற்றம் செய்தார்.
அதேபோல அப்போது ஒயர்லெஸ் பிரிவுக்கான ஆலோசகராக இருந்த ஆர்.பி. அகர்வால், கடுமையாக மிரட்டப்பட்டார். கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று கூறி அவரை மிரட்டியுள்ளனர். இதையடுத்து டெல்லி சர்க்கிளுக்கு ஸ்வான் நிறுவனத்திற்கு லைசென்ஸ் வழங்கும் உத்தரவை அவர் மேற்கொள்ள நேரிட்டது. இதை பின்னர் பெஹுரியாவும், ராசாவும் ஒப்புதல் கொடுத்தனர்.
டாடா டெலிசர்வீஸ் நிறுவனத்திற்கு 2ஜி லைசென்ஸ் போகக் கூடாது என்பதில் ராசா உள்ளிட்டோர் மிகவும் தீவிரமாக இருந்துள்ளனர். இதுதொடர்பாக பெரும் சதி வேலைகளிலும் அவர்கள் ஈடுபட்டனர்.
கொள்கை அளவில் 20 சர்க்கிள்களில் 2ஜி தொழில்நுட்பத்தைப் பெற டாடா டெலிசர்வீஸ் நிறுவனத்திற்கு ஒப்புக் கொள்ளப்பட்டது. மேலும் டாடா நிறுவனம், அனைத்து நிபந்தனைகளும், விதிமுறைகளையும் பூர்த்தி செய்து காத்திருந்தது.
இந்த நிலையில், திடீரென டாடா டெலிசர்வீஸ் நிறுவனத்தின் கோப்புகளைக் காணவில்லை என்று கூறிய தொலைத் தொடர்புத்துறை மீண்டும் மார்ச் 25ம் தேதிக்குள் (2008ம் ஆண்டு) புதிதாக விண்ணப்பிக்குமாறு டாடாவுக்கு உத்தரவிட்டது. ஆனால் ஸ்வான் நிறுவனத்திற்கும், யூனிடெக் நிறுவனத்திற்கும் அதற்கு முன்பாகவே 2ஜி லைசென்ஸை கொடுத்து முடித்து விட்டனர் என்று கூறியுள்ளார் சிங்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications