அமெரிக்காவை அழிப்போம்-ஜவாஹிரி கொக்கரிப்பு!

இவர் பின்லேடன் உயிருடன் இருந்தபோதே அவருக்கு எதிராக செயல்பட்டவராக வர்ணிக்கப்பட்டவர். நீண்ட காலத்திற்கு முன்பே இவர் பின்லேடனை விட்டுப் பிரிந்து விட்டதாகவும் தகவல்கள் கூறின. இவர் என்ன ஆனார் என்பதும் மர்மமாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் இவர் உயிருடன் இருப்பது தற்போது தெரிய வந்துள்ளது. ஒரு வீடியோ மூலம் தனது பேச்சை வெளியிட்டுள்ளார் ஜவாஹிரி. 28 நிமிடம் அந்த வீடியோவில் பேசியுள்ளார் ஜவாஹிரி.
வெள்ளை நிறத் தலைப்பாகையுடன், முதுகுக்குப் பின்னால் சுவரில் பொருத்தப்பட்ட துப்பாக்கியின் பின்னணியில் பேசினார் ஜவாஹிரி.
வீடியோவில் ஜவாஹிரி கூறுகையில், இன்று, கடவுளின் அருளால், அமெரிக்காவுக்கு எதிராக ஒரு தனி மனிதரோ அல்லது குழுவோ அல்லது பிரிவோ எதிரியாக இல்லை. மாறாக ஒட்டுமொத்த இஸ்லாமிய உலகும் இன்று அமெரிக்காவுக்கு எதிரியாக மாறியுள்ளது. மிகப் பெரிய புரட்சியை அமெரிக்கா சந்தித்துக் கொண்டுள்ளது. ஜிஹாத் விஸ்வரூபத்தை எட்டியுள்ளது.
ஒசாமா பின்லேடன் இன்று ஒரு தியாகியாக கடவுளை அடைந்துள்ளார். அமெரிக்க மக்களை பெரும் பீதிக்குள்ளாக்கி பெருமைக்குரியவர் பின்லேடன். உயிருடன் இருந்தபோதும் சரி, மரணத்திற்குப் பின்னரும் சரி, அவர் அமெரிக்க மக்களை பீதிக்குள்ளாக்கிபடிதான் உள்ளார்.
டுனிஷியா, எகிப்து, லிபியா, ஏமன், சிரியா நாடுகளில் நடந்ததைப் பார்த்திருப்பீர்கள். அதேபோன்ற நிலை விரைவில் அமெரிக்காவுக்கும் வரும். சர்வதேச முஸ்லீ்ம் சமுதாயம் ஒருங்கிணைந்து அமெரிக்காவை அழித்தொழிக்கும்.
அனைத்து இடங்களிலும் எங்களது சகோதரர்கள் செயல்பட்டு வருகிறார்கள். எங்களது கரங்கள் உங்களை நோக்கி, உங்களது இதயங்களை நோக்கி நீண்டு வருகிறது. எனவே அனைவரும் இணைந்து செயல்பட்டு அல்லாவின் உலகத்தை நிலை நிறுத்துவோம்.
பின்லேடனின் கொல்லப்பட்ட பின்னர் அவரது புகைப்படங்களை வெளியிட அமெரிக்கா பயப்படுகிறது. காரணம், இஸ்லாமிய மக்களின் ஒட்டுமொத்த வெறுப்பையும் சம்பாதிக்க நேரிடுமே என்றஅச்சம்தான் அதற்குக் காரணம். நாம் செய்ய நினைத்ததை பின்லேடன் சாதித்து விட்டார். அவரது செய்தி அனைவரையும் வந்து சேர்ந்துள்ளது.
பின்லேடனின் மரணத்திற்கு பாகிஸ்தான் ராணுவத்தினரும், அரசியல்வாதிகளும் முக்கியக் காரணமாவர். இந்த துரோகிகளுக்கு எதிராக பாகிஸ்தான் மக்கள் பொங்கி எழ வேண்டும். ஊழல் கரை படிந்த பாகிஸ்தான் அரசியல்வாதிகளுக்கு எதிராக கொதித்து எழ வேண்டும். அமெரிக்காவின் அடிமை நாடாக மாறியுள்ள பாகிஸ்தானை மீட்க வேண்டும். அல்லது அவர்கள் உங்களைக் கொன்று அழித்து விடுவார்கள் என்றார் ஜவாஹிரி.
ஜவாஹிரியின் இந்த செய்தி குறித்து அமெரிக்கா இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை.
-
ஈரானின் பலத்தை அழிச்சிட்டோம்.. ஒப்பந்தத்திற்கு வராவிட்டால் கற்காலத்திற்கு.. டிரம்ப் பகிரங்க வார்னிங் -
இனி மருந்துகளுக்கு எல்லாம் 100% வரி.. மீண்டும் ஆரம்பித்த டிரம்ப்.. இந்தியாவை எந்தளவுக்கு பாதிக்கும்? -
துபாய்க்கு இப்போ தான் உசுரே வந்துருக்கு..ஈரானை முடக்கிய அமெரிக்கா? டிரம்ப் சொன்ன வார்த்தை.. அடுத்து? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்!












Click it and Unblock the Notifications