Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சுங்கவரி உயர்வை கண்டித்து பெங்களூர்- சென்னை சாலையில் லாரிகள் திடீர் ஸ்ட்ரைக்!

Subscribe to Oneindia Tamil

Lorry Strike
சென்னை: பெங்களூர்- சென்னை 4 வழிச்சாலையில் சுங்கவரி உயர்வை எதிர்த்து நாளை அறிவிக்கப்படிருந்த லாரிகள் வேலை நிறுத்தம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் தலைவர் ஜி.ஆர்.சண்முகப்பா நேற்று கூறுகையில், "பெங்களூரில் இருந்து சென்னைக்கு செல்லும் 4 வழிச்சாலைகளில் சுங்கவரி உயர்த்தப்பட்டது. அதாவது ரூ.1,890-ல் இருந்து ரூ.2,950 ஆக கட்டணம் அதிகரிக்கப்பட்டது. அதிகரிக்கப்பட்ட இந்த கட்டண உயர்வு 6 வழிச்சாலைக்காக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

ஆனால் இன்னும் 6 வழிச்சாலையே ஏற்படுத்தவில்லை. அதற்குள்ளாகவே சுங்கவரியை உயர்த்திவிட்டனர். இதனால் லாரி உரிமையாளர்கள் பாதிக்கப்படுவார்கள்.

எனவே, இந்த கட்டண உயர்வை வாபஸ் பெறக்கோரி 15-ந் தேதி (நாளை) நள்ளிரவு முதல் பெங்களூர்-சென்னை 4 வழிச்சாலையில் லாரிகளை இயக்கமாட்டோம் என்று முடிவு செய்து இருந்தோம். இந்த நிலையில் இது தொடர்பாக பேச்சுவார்த்தைக்கு வரும்படி மத்திய அரசு எங்களுக்கு அழைப்பு விடுத்து இருக்கிறது.

இதை ஏற்று நாங்கள் பேச்சுவார்த்தைக்கு செல்கிறோம். இந்த பேச்சுவார்த்தை 15-ந் தேதி (அதாவது நாளை) டெல்லியில் நடக்கிறது. அதனால் எங்களது போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்திவைத்து இருக்கிறோம். இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை என்றால் அடுத்த 2 நாளில் மீண்டும் எங்களது போராட்டத்தை தொடங்குவோம்," என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+