வெளிநாட்டு தொழிலாளர்களை கட்டுப்படுத்த சௌதி அரசு முடிவு
ரியாத்: உள்நாட்டுத் தொழிலாளர்களின் வேலைவாய்பினை அதிகரிக்கும் வகையில் செளதி அரேபியா அரசு முக்கிய திட்டங்களை வகுத்துள்ளது.
உள்ளூர் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு
வெளிநாடுகளில் இருந்து சௌதி அரேபியாவிற்கு தேவையான தொழிலாளர்களை தேர்வு செய்யும் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகளையும் சௌதி அரசு அறிமுகம் செய்துள்ளது. இதற்கான உத்தரவினை தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து சௌதியில் வந்து பணிபுரியும் தொழிலாளர்களின் திறனைப் பொறுத்து பணி நிர்யணம் செய்யப்படுகிறது. இதற்காக 'நிடாகாட்" என்ற திட்டத்தை வகுத்துள்ளது. உள்ளூர் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பை அதிகரிக்கச் செய்வதே இதன் நோக்கமாகும்.
இத்திட்டத்தின் கீழ் சௌதியில் உள்ள நிறுவனங்கள் நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. அதன்படி, எக்ஸலண்ட், பச்சை, மஞ்சள் மற்றும் சிகப்பு என நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு அதனடிப்படையில் தொழிலாளர் நல அமைச்சகம் விசா மற்றும் பணிக்கான ஆர்டர்களை வழங்குவதில் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
விசா வழங்க கட்டுப்பாடு
எக்ஸலன்ட் மற்றும் பச்சையின் கீழ் வரும் நிறுவனங்கள் சௌதி அல்லாதவர்களுக்கு விசா வழங்க அனுமதித்துள்ளது. மேலும் மஞ்சள் நிறத்தின் கீழ் வரும் நிறுவனங்கள் 9 மாதம் விசாவும், சிகப்பு நிறத்தின் கீழ் வரும் நிறுவனங்கள் 6 மாத விசாவும் வெளிநாட்டில் இருந்து வரும் தொழிலாளர்களுக்கு வழங்கலாம் என அனுமதித்துள்ளது. சௌதி அரேபியாவில் அதிகரித்து வரும் மக்கள் தொகையை கட்டுப்படுத்தவே அந்நாட்டு அரசு இத்தகைய நடவடிக்கைகளை எடுத்துள்ளது. கடந்த ஆண்டு சௌதி அரேபியாவின் மக்கள் தொகை 27 மில்லியன் ஆக இருந்தது. இதில் 30 சதவிகிதம் பேர் வெளிநாட்டினர். இதில் இந்தியாவைச் சேர்ந்த இரண்டு மில்லியன் தொழிலாளர்கள் கடந்த ஆண்டு இறுதியில் சௌதி சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. சௌதி அரசின் புதிய திட்டத்தினால் இந்தியத் தொழிலாளர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்ற அச்சம் எழுந்துள்ளது.
-
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications