பாபுவா நியூகினியாவில் பலத்த நிலநடுக்கம்-சுனாமி எச்சரிக்கை இல்லை
சிட்னி: பாபுவா நியூகினியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் இதனால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை.
பாபுவா நியூகினியாவின் நியூ பிரிட்டன் கடற்கரைப் பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் அளவு 6.6 ரிக்டராக பதிவாகியுள்ளது.
கடலுக்கு கீழே 21 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் கழகம் கூறியுள்ளது. அதேசமயம், 37 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஆஸ்திரேலியத் தகவல் தெரிவிக்கிறது.
இருப்பினும் இந்த நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை அபாய அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை.
பாபுவா நியூகினியா தாது வளம் நிறைந்த ஒரு குட்டி நாடு. இருப்பினும் இங்கு வறுமை கொடி கட்டிப் பறப்பது குறிப்பிடத்தக்கது. பூகம்பம் அதிகம் தாக்கும் பசிபிக் அக்னி வளையத்தின் கீழ் இந்த குட்டி நாடும் வருகிறது.
1997ம் ஆண்டு இங்கு தாக்கிய கடும் நிலநடுக்கத்திற்கு 3500 பேர் பலியானார்கள் என்பது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications