காமன்வெல்த் ஊழல் வழக்கு-17 இடங்களில் வருமான வரித்துறை ரெய்டு
டெல்லி: காமன்வெல்த் போட்டி ஊழல் வழக்கில் நேற்று வருமான வரித்துறை அதிகாரிகள் 17 இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர்.
இரு காண்டிராக்டர்களுக்குச் சொந்தமான இடங்கள் இவை. இந்த இரு காண்டிராக்டர்களும் மொத்தம் ரூ. 140 கோடி அளவுக்கு போட்டி ஒப்பந்தங்களைப் பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே காமன்வெல்த் ஊழல் தொடர்பாக சுரேஷ் கல்மாடி உள்ளிட்டோர் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். வருமானவரித்துறையும் அவ்வப்போது ரெய்டுகளை நடத்தி வருகிறது. அமலாக்கப் பிரிவும், வருமான வரித்துறையும் இதுதொடர்பாக தனித் தனியாக வழக்குகளையும் பதிவு செய்துள்ளன. சிபிஐயும் தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது.
இந்த நிலையில் நேற்று டெல்லியைச் சேர்ந்த இந்த இரண்டு காண்டிராக்டர்களுக்கும் சொந்தமான 17 அலுவலகங்களை வருமான வரித்துறையினர் முற்றுகையிட்டு சோதனை நடத்தினர்.
இந்த இருவரும், சாலையோர அழகுப் பணிகளுக்கான ஒப்பந்தங்களைப் பெற்றிருந்தனர்.












Click it and Unblock the Notifications