2ஜி ஊழலில் நான் லாபமடைந்ததாக கூறப்படும் புகார் அவதூறானது-ப.சிதம்பரம்

நீரா ராடியா மற்றும் ரிலையன்ஸ் நிறுவன அதிகாரி ராமச்சந்திரன் ராஜா மற்றும் ராடியா ஆகியோருக்கு இடையிலான தொலைபேசி உரையாடல்கள் மூலம் சிதம்பரத்திற்கும் 2ஜி ஊழலில் பங்கு உள்ளது. எனவே அவர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று பாஜக கோரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பான உரையாடலை சில மீடியாக்கள் வெளியிட்டுள்ளன.
இதையடுத்து ப.சிதம்பரம் விளக்கமளித்துள்ளார். அதில்,
இந்த் தகவல் முற்றிலும் தவறானது, அவதூறானது, பொய்யானது. எனக்கு எதிராக வேண்டும் என்றே விஷமத்தனமாக இந்த கிசுகிசுப்பை பரப்பியுள்ளனர். இதுதொடர்பாக ராமச்சந்திரன் ராஜாவும், நீரா ராடியாவும் பேசிக் கொண்டதாக கூறப்படுவது அவதூறானது.
ராமச்சந்திரன் ராஜா மற்றும் நீரா ராடியா தொலைபேசிப் பேச்சு தொடர்பான உரையாடலை சில மீடியாக்கள் வெளியிட்டுள்ளன. இதற்கான பதிவு இருப்பதாகவும் கூறியுள்ளனர். ஆனால் எனக்கும் இந்த விவகாரத்திற்கும் துளியும் சம்பந்தமில்லை என்று கூறிக் கொள்ள விரும்புகிறேன் என்று கூறியுள்ளார் சிதம்பரம்.
மன்னிப்பு கேட்டது ரிலையன்ஸ்
இதற்கிடையே தனது நிறுவனத்தைச் சேர்ந்த ஒருவர் வேண்டும் என்றே ப.சிதம்பரம் மீது அவதூறு ஏற்படுத்தும் நோக்கில் பேசியுள்ளதாக ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. அந்த ஊழியருக்காக தான் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் ரிலையன்ஸ் தெரிவித்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார் ப.சிதம்பரம். அதற்குப் பதிலளித்துள்ள ரிலையன்ஸ் குழும தலைவர் வி.பாலசுப்ரமணியம் கூறுகையில், எங்களது நிறுவனத்தைச் சேர்ந்த கே.ராமச்சந்திரன் ராஜா என்பவர் உங்களைப் பற்றி நீரா ராடியாவுடன் தொலைபேசி உரையாடலின்போது குறிப்பிட்டவை வேண்டும் என்றே உள்நோக்கத்துடன் குறிப்பிட்டவையாகும்.
அது நியாயமற்றது, தவறானது, தேவையற்றது, அவதூறானதாகும். இதற்காக ரிலையன்ஸ் நிறுவனம் சார்பில் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம் என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications