நாகர்கோவில் அருகே சுரங்கத்துறை அதிகாரி கைது !
நாகர்கோவில்: நாகர்கோவிலில் கல் குவாரிக்கு பாஸ் கொடுப்பதற்காக லஞ்சம் கேட்ட சுரங்கத்துறை அதிகாரியை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
நாகர்கோவில் பனந்தால்மூடை அடுத்துள்ள அவரிகாளை விளையை சேர்ந்தவர் ரமேஷ்குமார். இவர் காரோடு பகுதியில் கல்குவாரி நடத்தி வருகிறார்.
கடந்த 8 ம் தேதி கல் எடுப்பதற்காக புவியியல் மற்றும் சுரங்கத்துறை இயக்குநர் மாரிமுத்துவிடம் 200 பாஸ் வாங்க ரமேஷ்குமார் சென்றுள்ளார்.
அப்போது தனக்கு ரூ 25 ஆயிரம் பணம் தர வேண்டும் அதிகாரி மாரிமுத்து என்று ரமேஷ்குமாரிடம் வற்புறுத்தியுள்ளார்.
ஆனால், லஞ்சம் கொடுக்க மனம் வராத ரமேஷ்குமார் இது குறித்து நாகர்கோயில் விஜிலென்ஸ் டி.எஸ்.பி. சுந்தர்ராஜனிடம் புகார் அளித்தார்.
இதனையடுத்து டி.எஸ்.பி. அறிவுரையின் பேரில் ரமேஷ்குமார் சுரங்கத்துறை அதிகாரி மாரிமுத்துவிடம் ரூ 20 ஆயிரம் பணத்தை கொடுத்துள்ளார்.
அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் புவியியல் மற்றும் சுரங்கத்துறை இயக்குநர் மாரிமுத்துவை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
நாகர்கோவில், லஞ்சம், சுரங்கத்துறை அதிகாரி, கைது,












Click it and Unblock the Notifications