முதல்வர் ஜெயலலிதாவுடன் இணைந்து செயல்பட இலங்கை அரசு ஆர்வம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண முதல்வர் ஜெயலலிதாவுடன் இணைந்து செயல்பட விரும்புவதாக இலங்கை அரசு கூறியுள்ளது.

இதுகுறித்து இந்தியாவுக்கான இலங்கை தூதர் பிரசாத் காரியவாசம் கூறுகையில்,

இலங்கைத் தமிழர்கள் தங்களது வசிப்பிடங்களுக்கு மீண்டும் இலங்கைத் தமிழர் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில் தமிழக முதல்வருடன் இணைந்து செயல்பட இலங்கை அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுவருகிறது.

தமிழக முதல்வர், தமிழக மக்கள் ஆகியோருடன் உள்ள நல்லெண்ணத்தையும் நம்பிக்கையையும் வலுப்படுத்தும் விதத்தில் நல்ல உறவை வைத்துக் கொள்ள இலங்கை அரசு ஆர்வத்துடன் இருக்கிறது.

பிரதமர் மன்மோகன் சிங்கை தமிழக முதல்வர் சந்தித்தபோது இலங்கைத் தமிழர் பிரச்னை குறித்து தெரிவித்த கவலைகளை நீக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.

இந்தியா- இலங்கை நாடுகளுக்கு இடையேயான நல்லுறவு மிக நெருக்கமானது. சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது. அதன் அடிப்படையில் பிரச்னைகளுக்குத் தீர்வு காண இரு தரப்பினரும் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.

இரு நாடுகளுக்கும் இடையிலான தமிழர் பிரச்னைக்குத் தீர்வு காண வரும் காலங்களில் தமிழக முதல்வருடன் இணைந்து செயல்படுவோம்.

கச்சத்தீவு பிரச்னை இரு நாடுகளுக்கும் இடையில் இறுதி செய்யப்பட்ட பிரச்னை ஆகும். இறுதி செய்யப்பட்டுவிட்ட இப் பிரச்னை குறித்து கருத்துத் தெரிவிக்க விரும்பவில்லை என்றார் அவர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+