கோர்ட் நேரத்தை வீணடித்ததாக டிராபிக் ராமசாமிக்கு ரூ. 10,000 அபராதம்

Subscribe to Oneindia Tamil

Traffic Ramasamy
சென்னை: கோர்ட் நேரத்தை வீணடித்து விட்டதாக கூறி பிரபல சமூக சேவகர் டிராபிக் ராமசாமிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ரூ.10,000 அபராதம் விதித்துள்ளது.

சென்னையைச் சேர்ந்தவர் ராமசாமி எனப்படும் டிராபிக் ராமசாமி. பொதுமக்கள் நலனுக்காக பல்வேறு வழக்குகளைத் தொடர்நது அதில் பலவற்றில் வெற்றியும் பெற்றவர்.வக்கீல் வைத்துக் கொள்ளாமல் தானே வாதாடுவார்.

இந்த நிலையில் இவர் உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அதில், ஊழல் ஒழிப்புக்கான லோக்பால் சட்ட மசோதா வரவு கமிட்டியில் தென் மாநிலத்திற்கு பிரதி நிதித்துவம் வழங்க வேண்டும் என்று நான் மத்திய அரசுக்கு மனு கொடுத்திருந்தேன்.

அம்மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த மனு தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால், நீதிபதி சிவஞானம் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் அதை டிஸ்மிஸ் செய்து உத்தரவிட்டனர்.

அப்போது நீதிபதிகள் கூறுகையில், ராமசாமி மத்திய அரசுக்கு மனு கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார். ஆனால் இம்மனுவை அவரது தனிச் செயலாளர் தான் கொடுத்துள்ளார். எனவே டிராபிக் ராமசாமி கோர்ட்டுக்கு தவறான தகவல் கொடுத்துள்ளார்.

பொது நல வழக்கு என்ற பெயரில் இது போன்ற வழக்கை தாக்கல் செய்து கோர்ட்டு நேரத்தை வீணடித்துள்ளார்.

இருப்பினும் டிராபிக் ராமசாமியின் வயது கருதி அவருக்கு இந்த கோர்ட் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கிறது. அவர் இதை 3 வாரத்தில் தமிழ்நாடு சட்டப் பணிகள் ஆணைய குழுவிடம் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+