மாருதி தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் வாபஸ்

புதிய தொழிற்சங்கத்துக்கு அனுமதி தரவேண்டி கடந்த 13 நாட்களாக நீடித்த இப்பிரச்னை ஹரியானா மாநில அரசின் தலையீட்டிற்கு பின் முடிவுக்கு வந்துள்ளது.
பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்கள் 11 பேரையும் மீண்டும் பணியில் சேர்த்துக்கொள்ள மாருதி ஒப்புதல் அளித்துள்ளது. இதேபோன்று, புதிய தொழிற்சங்கத்துக்கு அனுமதி வழங்கமாட்டோம் என மாருதி தெரிவித்த கருத்தை தொழிலாளர்கள் ஏற்றுக்கொண்டனர்.
வேலைநிறுத்தத்தை வாபஸ் பெற்றதற்கான ஒப்பந்தத்தில் தொழிலாளர்கள் கையெழுத்திட்டுள்ளதாகவும், நாளை முதல் அவர்கள் பணிக்கு திரும்புவார்கள்," என்றும் ஹரியானா மாநில தொழிலாளர் நலத்துறை செயலாளர் சர்பன் சிங் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
"ஸ்ட்ரைக்கை வாபஸ் பெறுகிறோம். நிறுவனத்தின் 2000க்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் பணிக்குத் திரும்புகின்றனர்," என்று அறிவித்துள்ளார் ஏஐடியுசி பொதுச் செயலர் அனில் குமார்.
மாருதியின் பிரபல மாடல்களான ஸ்விப்ட், ஸ்விப்ட் டிஸைர், ஏ ஸ்டார் மற்றும் எஸ்எக்ஸ் 4 இந்தத் தொழிற்சாலையில்தான் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த 13 நாள் ஸ்ட்ரைக்கால் மாருதி நிறுவனத்துக்கு ரூ 380 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications