மூணாறில் மிக பலத்த மழை-சுற்றுலா பயணிகள் தவிப்பு!

Subscribe to Oneindia Tamil

Munnar
மூணாறு: மூணாறில் பலத்த மழை காரணமாக கொச்சி- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் மரங்கள் சாய்ந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கேரளாவில் புகழ் பெற்ற சுற்றுலா தலங்களில் மிக முக்கியமானது மூணாறு. இந்த பகுதிக்கு கேரளாவில் இருந்தும், தமிழகத்தில் இருந்தும் தினசரி ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவதுண்டு.

மூணாறிலும், சுற்றுப்புற பகுதிகளிலும் கடந்த இரண்டு நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக முதிரைபுழை ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

கொச்சி- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் மரங்கள் வேருடன் சாய்ந்தன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தீயணைப்புத் துறையினர் விரைந்து சென்று சாலையில் இருந்த மரங்களை போராடி அகற்றி, போக்குவரத்தை சீரமைத்தனர்.

கடும் மழையுடன் பலத்த காற்று வீசுவதால் மாட்டுப்பட்டி, குண்டளை அணைகளில் சுற்றுலா படகுகள் இயக்குவது நிறுத்தப்பட்டது.

கடும் மழை காரணமாக மூணாறு சுற்றுப்புர பகுதியில் வசிக்கும் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் குறைந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+