அனுபவங்களை புத்தகமாக எழுத, வாழ்க்கையை திரைப்படமாக எடுக்க ஹெட்லி ஆசை!

மும்பை பயங்கரவாத சம்பவத்தில் நேரடித் தொடர்புடையவன் ஹெட்லி. இவனை சிகாகோவில் வைத்து அமெரிக்க எப்பிஐ அதிகாரிகள் கைது செய்தனர். இவனுடன் பாகிஸ்தானிய கனடியரான தஹவூர் ராணாவும் கைது செய்யப்பட்டான்.இதில் ராணா வழக்கில் சமீபத்தில் தீர்ப்பு அளிக்கப்பட்டது. ராணாவுக்கு எதிராக, அரசுத் தரப்பு சாட்சியமாக மாறியுள்ளான் ஹெட்லி.
ராணாவுக்கு எதிராக அவன் அளித்த சாட்சியத்தின்போது இந்தியாவைக் குறி வைத்து பாகிஸ்தானும்,அதன் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ மற்றும் லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பு எப்படி செயல்பட்டு வருகின்றன என்பதை புட்டுப் புட்டு வைத்தார்.
இந்த நிலையில் தனது அனுபவங்களை புத்தகமாக வெளியிட விரும்புகிறானாம் ஹெட்லி. அதேபோல தனது வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்கவும் அவன் விரும்புகிறானாம்.
மேலும் இஸ்லாம் குறித்த உலக மக்களுக்குப் போதிக்கவும் விரும்புகிறான். சிறையிலிருந்து வெளியே வந்தவுடன் இதைச் செய்யும் திட்டத்தில் உள்ளானாம் ஹெட்லி. தனக்குப் பின்னர் தனது குழந்தைகளும் இதைப் பின்பற்ற வேண்டும் என்றும் விரும்புகிறான் ஹெட்லி.
இதுகுறித்து ராணாவுக்கு எதிரான வழக்கின் விசாரணையின்போது சமீபத்தில் ஆஜரான ஹெட்லி கூறுகையில், இஸ்லாம் குறித்து பல தவறான கருத்துக்கள் நிலவுகின்றன. இதை துடைக்க நான் விரும்புகிறேன். இதனால் இஸ்லாம் குறித்து உலகுக்கு போதிக்க நான் விரும்புகிறேன். இதை வருங்காலத்தில் எனது பிள்ளைகளும் செய்வார்கள் என்று நம்புகிறேன்.
எனது மனைவி சாஷியாவை, தினசரி பைபிள் மற்றும் திருக்குரானைப் படிக்குமாறு அறிவுறுத்தியுள்ளேன்.
எதிர்காலத்தில் எனது அனுபவங்களை வைத்து ஒரு புத்தகம் எழுதும் திட்டமும் உள்ளது. அதேபோல எனது வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக்கவும் விரும்புகிறேன் என்று கூறியுள்ளான் ஹெட்லி.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications