அனுபவங்களை புத்தகமாக எழுத, வாழ்க்கையை திரைப்படமாக எடுக்க ஹெட்லி ஆசை!

மும்பை பயங்கரவாத சம்பவத்தில் நேரடித் தொடர்புடையவன் ஹெட்லி. இவனை சிகாகோவில் வைத்து அமெரிக்க எப்பிஐ அதிகாரிகள் கைது செய்தனர். இவனுடன் பாகிஸ்தானிய கனடியரான தஹவூர் ராணாவும் கைது செய்யப்பட்டான்.இதில் ராணா வழக்கில் சமீபத்தில் தீர்ப்பு அளிக்கப்பட்டது. ராணாவுக்கு எதிராக, அரசுத் தரப்பு சாட்சியமாக மாறியுள்ளான் ஹெட்லி.
ராணாவுக்கு எதிராக அவன் அளித்த சாட்சியத்தின்போது இந்தியாவைக் குறி வைத்து பாகிஸ்தானும்,அதன் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ மற்றும் லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பு எப்படி செயல்பட்டு வருகின்றன என்பதை புட்டுப் புட்டு வைத்தார்.
இந்த நிலையில் தனது அனுபவங்களை புத்தகமாக வெளியிட விரும்புகிறானாம் ஹெட்லி. அதேபோல தனது வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்கவும் அவன் விரும்புகிறானாம்.
மேலும் இஸ்லாம் குறித்த உலக மக்களுக்குப் போதிக்கவும் விரும்புகிறான். சிறையிலிருந்து வெளியே வந்தவுடன் இதைச் செய்யும் திட்டத்தில் உள்ளானாம் ஹெட்லி. தனக்குப் பின்னர் தனது குழந்தைகளும் இதைப் பின்பற்ற வேண்டும் என்றும் விரும்புகிறான் ஹெட்லி.
இதுகுறித்து ராணாவுக்கு எதிரான வழக்கின் விசாரணையின்போது சமீபத்தில் ஆஜரான ஹெட்லி கூறுகையில், இஸ்லாம் குறித்து பல தவறான கருத்துக்கள் நிலவுகின்றன. இதை துடைக்க நான் விரும்புகிறேன். இதனால் இஸ்லாம் குறித்து உலகுக்கு போதிக்க நான் விரும்புகிறேன். இதை வருங்காலத்தில் எனது பிள்ளைகளும் செய்வார்கள் என்று நம்புகிறேன்.
எனது மனைவி சாஷியாவை, தினசரி பைபிள் மற்றும் திருக்குரானைப் படிக்குமாறு அறிவுறுத்தியுள்ளேன்.
எதிர்காலத்தில் எனது அனுபவங்களை வைத்து ஒரு புத்தகம் எழுதும் திட்டமும் உள்ளது. அதேபோல எனது வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக்கவும் விரும்புகிறேன் என்று கூறியுள்ளான் ஹெட்லி.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications