ரூ 10 கூலி உயர்வு கேட்டு போராட்டத்தில் தொழிலாளர்கள்-பிடிவாதம் பிடிக்கும் முதலாளிகள்

இந்த போரட்டம் குறித்து சிஐடியு மாநில செயலாளர் எம். அசோகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
விருதுநகரில் 433 எண்ணெய் செக்குகள் உள்ளன. இதில் மொத்தம் 198 தொழிலாளர்கள் நேரடியாகவும், மறைமுகமாக 400 க்கும் மேற்பட்டவர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.
தொழிலாளர்கள் எந்த அரசியல் கட்சியையும் சாராத சங்கமாக இருந்து வந்துள்ளனர். இதை பயன்படுத்திக் கொண்ட மில் முதலாளிகள் சிலர் கடந்த பல ஆண்டுகளாக தொழிலாளர்களை கசக்கி பிழிந்து வேலை வாங்கி வருகின்றனர்.
ஆனால், இந்த தொழிலாளர்கள் யாருக்கும், பி.எப், இ.எஸ்.ஐ., போனஸ் என எந்த உரிமையும் தருவது இல்லை. வேலை பார்க்கும் போது விபத்து ஏற்பட்டால் கூட எந்த நிவாரணமும் கிடையாது.
ஒரு நாளைக்கு 8 மணி நேரத்திற்கு மேல் வேலை பார்த்தால் இரட்டிப்பு சம்பளம் வழங்க வேண்டும் என்பது சட்டமாகும். அதுவும் நடைமுறைப்படுத்தவில்லை.
இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் தொழிலாளர் ஆய்வாளர் இன்றி சட்ட விரோதமாக எண்ணெய்புண்ணாக்கு சங்கத்தினருடன் ஒப்பந்தம் போட்டுள்ளனர்.
அது மிக, மிக குறைந்த கூலியாகும்.
தற்போது ஏறி வரும் விலைவாசி உயர்வால் நாள் ஒன்றுக்கு 21 மணி நேரம் உழைத்தால் தான் ஒரு நாள் கூலியாக ரூ 150 தருகின்றனர்.
ஆயில்மில் தொழிலாளர்களுக்கு ரூ 10 கூலி உயர்வு கேட்கின்றனர். ஆனால், முதலாளிகள் பிடிவாதம் பிடித்து தர மறுக்கின்றனர்.
இதனால் தொழிலாளர்கள் ஜூன் 12 முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மாவட்ட வருவாய் அலுவலரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால், முதலாளிகள் அடுத்த ஏப்ரல் மாதம் தான் ஒப்பந்தம் போட முடியும் என மறுத்து விட்டனர்.
மாவட்ட ஆட்சித் தலைவரிடம் பேச்சுவார்த்தைக்கு சென்றுள்ளனர். அவர் கூலி கட்டுபிடியாகவில்லை எனில் கட்டிட வேலைக்குப் போங்கள் என பொறுப்பின்றி கூறியுள்ளார் என்றார்.
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
நாடு முழுதும் ESMA அமல்.. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசு அதிரடி.. மீறினால் அவ்வளவுதான்












Click it and Unblock the Notifications