சென்னை கடற்கரை கண்ணகி சிலை பஸ் ஸ்டாப் மேற்கூரை இடிந்தது-3 பேர் காயம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை கடற்கரையில் உள்ள கண்ணகி சிலை பஸ் நிறுத்தத்தின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது. இதில் பஸ்சுக்காக காத்திருந்த 3 பேர் காயமடைந்தனர்.
சென்னை மெரீனா கடற்கரையில் கண்ணகி சிலை உள்ளது. இந்த இடத்தில் பஸ் நிறுத்தம் உள்ளது. இன்று காலை இந்த பஸ் நிறுத்தத்தின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது. இதில் பஸ்சுக்காக காத்திருந்த 3 பயணிகள் சிக்கி படுகாயமடைந்தனர்.
உடனடியாக அவர்களை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார், பஸ் நிறுத்தம் அருகே யாரும் செல்லாமல் தடை விதித்தனர்.
கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் கண்ணகி சிலை இங்கிருந்து அகற்றப்பட்டது. பின்னர் திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் கண்ணகி சிலை மீண்டும் நிறுவப்பட்டது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications