கூடுதல் கட்டண வசூலைக் கண்டித்து பள்ளி முன்பு பெற்றோர்கள் உண்ணாவிரதம்
சென்னை: சென்னையில் அரசின் கட்டண நிர்ணயத்தைக் கடைப்பிடிக்காமல் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக கூறி தனியார் பள்ளியின் முன்பு பெற்றோர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
சென்னை பெரம்பூரில் கல்கி ரங்கநாதன் மான்ட்போர்ட் என்ற தனியார் பள்ளி உள்ளது. இங்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக கடந்த ஆண்டு முதல் பெரும் சர்ச்சை நிலவி வருகிறது. இந்தப் பள்ளி நிர்வாகத்தை எதிர்த்து பெற்றோர் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த ஆண்டு, நீதிபதி ரவிராஜ பாண்டியன் கமிட்டி விதித்த கட்டணத்தை வசூலிக்காமல் அதிக அளவிலான கட்டணத்தை வசூலித்து வருவதாக பள்ளி நிர்வாகம் மீது பெற்றோர்கள் குற்றம் சாட்டி போராட்டங்களில் குதித்துள்ளனர்.
மேலும் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி 1 மற்றும் 6 ஆகிய வகுப்புகளுக்கு சமச்சீர் கல்வித் திட்டத்தை அமல்படுத்தவில்லை என்றும் பள்ளி நிர்வாகம் மீது பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்த நிலையில் இன்று காலை பள்ளி முன்பு பெற்றோர்கள் திரண்டு உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்தனர். இதனால் அங்கு பதட்டம் நிலவுகிறது.












Click it and Unblock the Notifications