தென்காசி நகராட்சி ஆணையர் ஆஜராக மதுரை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவு
தென்காசி: தென்காசி சொர்ணாபுரத்தில் அடிப்படை வசதி செய்யகோரிய வழக்கில் நகராட்சி ஆணையர் ஆஜராக மதுரை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் தென்காசியை சேர்ந்த திவான் ஓலி என்பவர் ஐகோர்ட் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது :
தென்காசி நகராட்சிக்கு உட்பட்ட 19வது வார்டு சொர்ணாபுரத்தில் 2500 மக்கள் வசிக்கின்றனர். இங்கு சாலை வசதி மோசமாக உள்ளது. குடிநீர் வசதி, பாதாள சக்கடை வசதி, சுகாதார வசதி இல்லை. சொர்ணபுரத்தில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்த நகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மானத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனுவை விசாரித்த நீதிபதிகள், சுகுனா, ஆறுமுகசாமி ஆகியோர் தென்காசி நகராட்சியில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து ஆணையர், நேரில் ஆஜாராகி மனுதாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்












Click it and Unblock the Notifications