கண்ணில் மிளகாய் பொடி தூவி பஞ். தலைவருக்கு அரிவாள் வெட்டு

Subscribe to Oneindia Tamil

விருதுநகர்: ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர்கள் அரிவாளால் சாரமரியாக வெட்டியதில் பஞ்சாயத்து தலைவர் படுகாயம் அடைந்தார். இந்த சம்பவம் விருதுநகர் அருகே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் அருகேயுள்ள வச்சக்காரப்பட்டி பஞ்சாயத்து தலைவராக இருப்பவர் அனந்தராமன். விருதுநகர் சாலையில் உள்ள அக்கரைப்பட்டி விலக்கு அருகே அய்யனார் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்குஅனந்தராமன் நேற்றிரவு 11 மணிக்கு வந்தார்.

அப்போது இரு பைக்குகளில் ஹெல்மெட் அணிந்து வந்த நான்கு மர்ம நபர்கள் அனந்தராமனை வழிமறித்து அவர் கண்களில் மிளகாய் பொடி தூவினர். இதனால் நிலைகுலைந்த அவரை அரிவாளால் சராமரியாக வெட்டினர். இதில் அனந்தராமனின் இடது கை, வலது கால், இடுப்பு உள்ளிட்ட பகுதிகளில் படுகாயம் ஏற்பட்டது.

சராமரியாக வெட்டியதும் அங்கிருந்து மர்ம நபர்கள் தப்பி ஓடினர். ஆபத்தான நிலையில் இருந்த அனந்தராமன் விருதுநகர் அரசு மருத்துமனையில் முதலுதவிக்கு பின் தனியார் மருத்துவமனையில் சிகி்ச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் வச்சகராப்பட்டியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புகாரின் பேரில் வச்சக்காரப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். முன்விரோதம் காரணமாக அரிவாள் வெட்டு சம்பவம் நடந்திருக்கலாமா என்ற கோணத்தில் விசாரிக்கும் போலீசார் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+