பிருந்தா காரத்துக்கு ராஜ்யசபா சீட்-ஜெயலலிதாவிடம் சிபிஎம் கோரிக்கை?

மேற்கு வங்கத்திலும், கேரளாவிலும் அசைக்க முடியாத சக்தியாக இருந்து வந்தது சிபிஎம் தலைமையிலான இடதுசாரி கூட்டணி. ஆனால் சமீபத்தில் நடந்த சட்டசபைத் தேர்தலில் இரு மாநிலங்களிலும் ஆட்சியை இழந்தது. அதில் மோசமான தோல்வி மேற்கு வங்கத்தில்தான் கிடைத்தது.
இதன் விளைவு விரைவில் பதவிக்காலத்தை முடிக்கும் மூ்ன்று ராஜ்யசபா உறுப்பினர்களை மீண்டும் தேர்ந்தெடுக்க முடியாத நிலையில் சிக்கியுள்ளது சிபிஎம்.
இந்தக் கட்சியின் முக்கியத் தலைவர்களான பிருந்தா காரத், சீதாராம் எச்சூரி மற்றும் முகம்மது அமீன் ஆகியோரின் ராஜ்யசபா உறுப்பினர் பவதிக்காலம் அடுத்த மாதத்தில் முடிவடைகிறது. அதேபோல இடதுசாரி கூட்டணியில் உள்ள ஆர்.எஸ்.பியின் அபானி ராயின் பதவிக்காலமும் முடிவடையவுள்ளது. ஆனால் இந்த நான்கு இடங்களுக்கும் மீண்டும் ஆட்களை அனுப்புவதில் இடதுசாரி கூட்டணிக்கு கடும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதனால் குறைந்தது பிருந்தா காரத் மற்றும் எச்சூரியை மட்டுமாவது எப்பாடுபட்டாவது ராஜ்யசபாவுக்கு அனுப்ப சிபிஎம் தீவிரமாக உள்ளது. காரணம், இந்த இருவரும் டெல்லி வட்டாரத்தில் கட்சியின் முக்கிய முகங்களாக இருப்பதால் இவர்களை இழக்க அக்கட்சி விரும்பவில்லை.
இருப்பினும் தற்போது மேற்கு வங்கத்தில், இடதுசாரி கூட்டணிக்கு மொத்தம் 62 இடங்களே உள்ளன. இதில் சிபிஎம்முக்கு 40 எம்.எல்.ஏக்களே உள்ளனர். ஒரு எம்.பியைத் தேர்ந்தெடுக்க குறைந்தது 42 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தேவை. எனவே மேற்கு வங்கத்திலிருந்து ஒரே ஒருவரை மட்டுமே ராஜ்யசபாவுக்கு அனுப்ப முடியும் என்ற நிலை.
கேரளாவிலிருந்து ஒருவரை அனுப்பலாம் என்றாலும், கேரள இடதுசாரி கட்சிகள் இதுவரை வெளியாட்களுக்கு தேர்தலில் நிற்க அனுமதி கொடுத்ததில்லை, கொடுக்கவும் மாட்டார்கள். எனவே அங்கு பிருந்தாவையோ அல்லது எச்சூரியையோ நிறுத்த முடியாது என்ற இக்கட்டான நிலை.
இதனால் தற்போது தமிழகத்தின் பக்கம் தனது பார்வையைத் திருப்பியுள்ளது சிபிஎம். தமிழகத்தில் அதிமுக உறுப்பினர் கே.வி.ராமலிங்கத்தின் ராஜினாமாவால் ஒரு இடம் காலியாகியுள்ளது. அதற்கு தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த இடத்தை தங்களுக்கு ஒதுக்குமாறு சிபிஎம் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத், முதல்வர் ஜெயலலிதாவிடம் கோரியுள்ளதாக தெரிகிறது.
இந்த இடம் கிடைத்தால் தனது மனைவியான பிருந்தாவை நிறுத்தலாம் என்பது பிரகாஷ் காரத்தின் திட்டம். இருப்பினும் இதுகுறித்து ஜெயலலிதா இதுவரை பதில் ஏதும் தரவில்லை என்று தெரிகிறது.
அதேசமயம், சிபிஐயும், இந்த இடத்திற்குக் குறி வைத்துள்ளது. சமீபத்தில் டெல்லி சென்றிருந்த ஜெயலலிதா, கட்சியின் தேசியச் செயலாளர் டி.ராஜா நேரில் சந்தித்து இதுகுறித்ததுப் பேசியதாக தெரிகிறது.
இந்த ஒரு இடத்தை ஜெயலலிதா தானே வைத்துக் கொள்வாரா அல்லது இடதுசாரி கட்சிகளுக்கு ஒதுக்குவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ராஜ்யசபாவில் தற்போது அதிமுகவுக்கு ஐந்து எம்.பிக்களே உள்ளனர். அதேசமயம், திமுகவுக்கு 7 பேர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே தனது கட்சியின் பலத்தைக் கூட்டுவதில் ஜெயலலிதா முன்னுரிமை காட்டுவார் என்றும் கூறப்படுகிறது.
-
'ஜெ' வின் பூர்வீக பூமி ஸ்ரீரங்கம்..! 'ஜெயா'வுக்கு மறுவாழ்வு அளித்த திருச்சி- விஜய் கணக்குப் புரிகிறதா? -
மார்க்சிஸ்ட் அரசியல் வரலாற்றில் முதன்முறை! மதுரையில் போட்டியிடாத சிகப்பு சட்டை தோழர்கள்! என்னாச்சு? -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா?












Click it and Unblock the Notifications