பிருந்தா காரத்துக்கு ராஜ்யசபா சீட்-ஜெயலலிதாவிடம் சிபிஎம் கோரிக்கை?

மேற்கு வங்கத்திலும், கேரளாவிலும் அசைக்க முடியாத சக்தியாக இருந்து வந்தது சிபிஎம் தலைமையிலான இடதுசாரி கூட்டணி. ஆனால் சமீபத்தில் நடந்த சட்டசபைத் தேர்தலில் இரு மாநிலங்களிலும் ஆட்சியை இழந்தது. அதில் மோசமான தோல்வி மேற்கு வங்கத்தில்தான் கிடைத்தது.
இதன் விளைவு விரைவில் பதவிக்காலத்தை முடிக்கும் மூ்ன்று ராஜ்யசபா உறுப்பினர்களை மீண்டும் தேர்ந்தெடுக்க முடியாத நிலையில் சிக்கியுள்ளது சிபிஎம்.
இந்தக் கட்சியின் முக்கியத் தலைவர்களான பிருந்தா காரத், சீதாராம் எச்சூரி மற்றும் முகம்மது அமீன் ஆகியோரின் ராஜ்யசபா உறுப்பினர் பவதிக்காலம் அடுத்த மாதத்தில் முடிவடைகிறது. அதேபோல இடதுசாரி கூட்டணியில் உள்ள ஆர்.எஸ்.பியின் அபானி ராயின் பதவிக்காலமும் முடிவடையவுள்ளது. ஆனால் இந்த நான்கு இடங்களுக்கும் மீண்டும் ஆட்களை அனுப்புவதில் இடதுசாரி கூட்டணிக்கு கடும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதனால் குறைந்தது பிருந்தா காரத் மற்றும் எச்சூரியை மட்டுமாவது எப்பாடுபட்டாவது ராஜ்யசபாவுக்கு அனுப்ப சிபிஎம் தீவிரமாக உள்ளது. காரணம், இந்த இருவரும் டெல்லி வட்டாரத்தில் கட்சியின் முக்கிய முகங்களாக இருப்பதால் இவர்களை இழக்க அக்கட்சி விரும்பவில்லை.
இருப்பினும் தற்போது மேற்கு வங்கத்தில், இடதுசாரி கூட்டணிக்கு மொத்தம் 62 இடங்களே உள்ளன. இதில் சிபிஎம்முக்கு 40 எம்.எல்.ஏக்களே உள்ளனர். ஒரு எம்.பியைத் தேர்ந்தெடுக்க குறைந்தது 42 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தேவை. எனவே மேற்கு வங்கத்திலிருந்து ஒரே ஒருவரை மட்டுமே ராஜ்யசபாவுக்கு அனுப்ப முடியும் என்ற நிலை.
கேரளாவிலிருந்து ஒருவரை அனுப்பலாம் என்றாலும், கேரள இடதுசாரி கட்சிகள் இதுவரை வெளியாட்களுக்கு தேர்தலில் நிற்க அனுமதி கொடுத்ததில்லை, கொடுக்கவும் மாட்டார்கள். எனவே அங்கு பிருந்தாவையோ அல்லது எச்சூரியையோ நிறுத்த முடியாது என்ற இக்கட்டான நிலை.
இதனால் தற்போது தமிழகத்தின் பக்கம் தனது பார்வையைத் திருப்பியுள்ளது சிபிஎம். தமிழகத்தில் அதிமுக உறுப்பினர் கே.வி.ராமலிங்கத்தின் ராஜினாமாவால் ஒரு இடம் காலியாகியுள்ளது. அதற்கு தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த இடத்தை தங்களுக்கு ஒதுக்குமாறு சிபிஎம் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத், முதல்வர் ஜெயலலிதாவிடம் கோரியுள்ளதாக தெரிகிறது.
இந்த இடம் கிடைத்தால் தனது மனைவியான பிருந்தாவை நிறுத்தலாம் என்பது பிரகாஷ் காரத்தின் திட்டம். இருப்பினும் இதுகுறித்து ஜெயலலிதா இதுவரை பதில் ஏதும் தரவில்லை என்று தெரிகிறது.
அதேசமயம், சிபிஐயும், இந்த இடத்திற்குக் குறி வைத்துள்ளது. சமீபத்தில் டெல்லி சென்றிருந்த ஜெயலலிதா, கட்சியின் தேசியச் செயலாளர் டி.ராஜா நேரில் சந்தித்து இதுகுறித்ததுப் பேசியதாக தெரிகிறது.
இந்த ஒரு இடத்தை ஜெயலலிதா தானே வைத்துக் கொள்வாரா அல்லது இடதுசாரி கட்சிகளுக்கு ஒதுக்குவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ராஜ்யசபாவில் தற்போது அதிமுகவுக்கு ஐந்து எம்.பிக்களே உள்ளனர். அதேசமயம், திமுகவுக்கு 7 பேர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே தனது கட்சியின் பலத்தைக் கூட்டுவதில் ஜெயலலிதா முன்னுரிமை காட்டுவார் என்றும் கூறப்படுகிறது.
-
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான் -
சிலிண்டர் காலி.. LPG இல்லை.. சென்னையில் இன்று மூடப்படும் முக்கிய ஹோட்டல்கள்.. நிலைமை கையை மீறுது -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங்












Click it and Unblock the Notifications